search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆள் கடத்தல்"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 போலீஸ்காரர்கள் கடத்தி, கொல்லப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்றனர். #SoporeGunmen #manabducted
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

    காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களில் 3 போலீசார் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம், சோபோர் நகரத்தின் அருகேயுள்ள ஹர்வான் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று பின்னிரவில் புகுந்த பயங்கரவாதிகள் முஷ்ட்டா அஹமத் மிர்(45) என்பவரை கடத்திச் சென்றனர்.

    அவரது நிலைமை என்னவானது? என்பது புரியாத நிலையில் அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #SoporeGunmen #manabducted 
    நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. #HumanTrafficking #LokSabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதும், கடத்தல்காரர்களை தண்டிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.

    ஆள் கடத்தலை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.



    ஆண், பெண் இருபாலருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் இம்மசோதா பொருந்தும் என்று விவாதத்துக்கு பதில் அளித்தபோது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். மனிதர்களை வாங்குவதும், விற்பதும் முதல்முறையாக குற்றம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #HumanTrafficking #LokSabha #tamilnews 
    ×