என் மலர்
நீங்கள் தேடியது "Cyber Crime"
திருப்பூர்:
மோசடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே சைபர்கிரைம் போலீசாரை அணுக வேண்டும் என திருப்பூர் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம்.
செல்போனுக்கு வரும் தவறான 'லிங்கை' தொடுவதை தவிர்க்க வேண்டும். ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும்போது, யாராவது தானாக உதவுவதாக கூறினால் மறுத்து விடவும். கஸ்டமர் கேர் எண்களை கூகுளில் தேடும் போது கவனம் தேவை. தவறான எண்களை தொடர்பு கொள்வதன் வாயிலாக ஏமாறும் வாய்ப்பு அதிகம்.
பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்த்தல் நல்லது. ஓ.எல்.எக்ஸ்., வாயிலாக, மிலிட்டரியில் பணிபுரிவதாக கூறி பொருட்களை குறைந்த விலையில் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம். ஆன்லைன் டேட்டிங் அப்ளிக்கேஷன்' வாயிலாக பழக்கமாகும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் 'வீடியோ கால்' வாயிலாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வெகுநேரமாக நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கி கணக்கை முடக்கிக் கொள்வது நல்லது. உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில், போலியான முகநூல் கணக்கு உருவாக்கி அதன் வாயிலாக அவசர தேவைக்காக பணம் கேட்கலாம். கவனம் தேவை.
தங்கள் நிலத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, ஓ.டி.பி., மற்றும் இதர வங்கி தகவல்களை பகிர்தல் கூடாது. வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடப்பட்டது தெரிந்தால் உடனடியாக, 155260 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகாரை cypercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.
- 5ஜி-க்கு மாற்றம் செய்ய கடவு சொல்லை கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம்.
- குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உங்கள் சிம் கார்டை 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு மாற்றம் செய்ய தங்களின் செல்போனுக்கு வந்துள்ள ஒரு நேர கடவு சொல்லை கூறுங்கள் என்று யாரும் கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். அதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சிம் கார்டு மாற்றம் உள்ளிட்ட சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்
திருமுருகன்பூண்டி :
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
- மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.அவ்வகையில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவர் 32 லட்சம் ரூபாய், ஊத்துக்குளியை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங்கில் 36 ஆயிரத்து 500 ரூபாய், பல்லடத்தை சேர்ந்த மோகன் என்பவர் விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி 7 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் இணையவழி வேலைவாய்ப்பில் உடுமலையை சேர்ந்த விசாலி என்பவர் 5 ஆயிரத்து 100 ரூபாய் இழந்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 வழக்குகளில் மொபைல் போன் எண்களை கண்டறிந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






