search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி ஏ. வி. பி., மெட்ரிக் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

    திருமுருகன்பூண்டி ஏ. வி. பி., மெட்ரிக் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்

    திருமுருகன்பூண்டி :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×