search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poilice"

    • 5ஜி-க்கு மாற்றம் செய்ய கடவு சொல்லை கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம்.
    • குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில் உங்கள் சிம் கார்டை 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு மாற்றம் செய்ய தங்களின் செல்போனுக்கு வந்துள்ள ஒரு நேர கடவு சொல்லை கூறுங்கள் என்று யாரும் கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். அதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சிம் கார்டு மாற்றம் உள்ளிட்ட சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×