search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபர்"

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
    • தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின். தொழில் அதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் கும்பலை நெருங்கினர். இந்நிலையில் கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேடப்படும் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என் கவுண்டரின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இதுகுறித்து லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சாம்பவ் ஜெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபம் என்கிற கோபி மற்றும் சஞ்சீவ் குமார் என்ற சஞ்சு பஹ்மான் ஆகியோர் போலீஸ் தரப்புடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் குல்வந்த் சிங் தலைமையிலான போலீஸ் குழு அவர்களை துரத்திக் கொண்டிருந்தபோது, லூதியானா மாவட்டத்தில் உள்ள டோராஹா நகரில் உள்ள திப்பா பாலம் அருகே என்கவுண்டர் நடந்தது. இதில் ஏ.எஸ்.ஐ. சுக்தீப் சிங் என்ற போலீஸ்காரரும் பலத்த காயமடைந்தார். இறந்த இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளி என்ற ஜதின், பிரேம்ஜித், மந்தோஷ், ஆதித்யா மற்றும் மன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    • மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
    • போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.

    தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
    • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

    கரூர்:

    கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

    அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

    • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
    • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்த குமரவேல் விருதுநகர் பஜாரில் இருந்த தனது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டாபட்டியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது24), ஹரிஹரன் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ஞானசேகரன்(57), விக்ரமன்(55) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த அமிர்தசங்கர் என்பவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • பெண் உள்பட 3பேர் மீது வழக்கு
    • 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள தச்சன்பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயசேகர்(வயது 42). வாகனம் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா(38). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு தச்சன்பரம்பை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வாடகைக்கு குடி யிருந்தனர்.

    வாடகை சரியாக கொடுக்காததால் அவர்களை ஜெயசேகர் தம்பதியர் காலி செய்ய கூறிவிட்டனர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜெயசேகர் அவரது மனைவி ஜீவா இருவரும் தச்சன்பரம் பில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் அவரது மனைவி சங்கீதா மற்றும் பிரசாத் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கம்பியால் ஜெயசேகரை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜெயசேகருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. தடுக்கவந்த ஜீவாவையும் கையால் தாக்கிய அவர்கள், ஜெயசேகர் பாக்கெட்டில் இருந்த ரூ.2ஆயிரத்தையும் எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ள னர்.

    பலத்த காயமடைந்த ஜெயசேகர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். காயம் அடைந்த ஜீவா குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஜெயசேகர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக் குமார், சங்கீதா உட்பட 3 பேர் மீதும் இரணியல் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்

    நாகர்கோவில் :

    இரணியல் அருகே பேயன்குழியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவில் பகுதியில் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழி லதிபர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் குறைபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததையடுத்து சகாய ஜெனிபரை அவர் கண்டித் தார். பின்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இத னால் சகாய ஜெனிபர் ஆத்திர மடைந்தார்.

    சம்பவத்தன்று தொழி லதிபர் பள்ளிவிளை பகுதி யில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த சகாய ஜெனிபர், அவரிடம் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் தொழில் அதிபருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சகாய ஜெனிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து தொழி லதிபர், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சகாய ஜெனிபர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகாய ஜெனிபர் மீது ஏற்கனவே இரணியல், திருச்சி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கைரேகை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைக்காததால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் தொழிலதிபர்.இவர் வீட்டில் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகனும் மகளும் வெளி நாட்டிலும் படித்து வரு கிறார்கள்.சென்னையில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக முருகன் மனைவியுடன் சென்றி ருந்தார். அப்போது முருகனின் தந்தை பூதலிங்கம் மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கைவரிசை காட்டி இருந்தனர். 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகன் வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    இது தொடர்பாக போலீசார் வட மாநில தொழி லாளர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமராவில் கொள்ளையர்கள் வந்த காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. எனவே கொள்ளை யர்கள் முருகனின் வீட்டின் பின்பகுதி வழியாக புகுந்து இருக்கலாம் என்று கருது கிறார்கள். எனவே பின்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் எதுவும் சிக்காத நிலையில் கைரேகையும் கிடைக்காததால் போலீ சாருக்கு குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் முருகனின் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்ற நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.

    லண்டன்:

    ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

    அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.

    • சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது.
    • புதிய ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.

    திருப்பூர் :

    நாளை முதல் சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவை நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ெரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎப் தொழிற்சா லையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

    கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க லாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ெரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ள ன. மேலும் வைபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.

    பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரெயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    12வது ெரயில் சேவையாக சென்னை- கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ெரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ெரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதி ர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும். நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என 3 ெரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ெரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

    இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ெரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரெயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கோவை சென்று விமானத்திலும், சிலர் கார்களிலும், ரெயில்களிலும் பயணிப்பா ர்கள். ரெயில்களை பொருத்தவரை டிக்கெட் கிடைக்காதது ஒருபுறமிருக்க தொழிலதிபர்கள் பலர் நவீன வசதிகளை எதிர்பார்ப்பார்கள். அந்த வசதிகள் வந்தே பாரத் ரெயிலில் இருப்பதால் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×