தொழிலதிபரிடம் ரூ.19½ லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார்.
தொழிலதிபரிடம் ரூ.19½ லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Published on

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலதிபரின் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பங்குசந்தையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை நம்பிய அவர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதற்கு மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பின்னர் டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார். அந்த தொகைக்கு அதிக லாபம் வந்ததாக அவருக்கு காட்டியுள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

மேலும் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகே, தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com