search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrababu Naidu"

    • ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    அமராவதி:

    ஆந்திர மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

    முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்தார்.

    கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா 21 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    இதேபோல், ஒடிசா மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

    • இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரமாநிலம் ராஜமகேந்திர வரம் அனக்கா பள்ளி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

    இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

    நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளக்கூடிய சாதனைகள்.

    நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறிதான் வாக்கு கேட்கிறோம். இந்திய மக்களுக்காக 10 வருடங்கள் உழைத்தோம். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.

    4 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தன. தற்போது அந்த நீளம் 8000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்துள்ளது. இது இரு மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த மோசடிகள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் 10 வருடங்களில் பல்வேறு மோசடிகளை செய்தார்கள். எந்திரங்களால் கூட எண்ண முடியாத அளவிற்கு பணத்தை குவித்து வைத்துக்கொண்டு அலறுகிறார்கள்.

    தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பண மலை ஒன்று சிக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் இளவரசர் பதில் சொல்ல வேண்டும். ஆந்திர மாநிலத்தில் என்.டி ராமராவ் ராமர் கதாபாத்திரத்தின் மூலம் வீடு வீடாக ராமரின் புகழை கொண்டு சென்றார்.

    அயோத்தியில் 400 ஆண்டுகால கனவை தற்போது நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் தலைவர்கள் பக்தியுடன் கோவிலுக்கு சென்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    சந்திரபாபு நாயுடு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஆந்திர மக்களுக்கு மோடியின் உத்தரவாதம் சந்திரபாபு நாயுடுவின் தலைமை பவன் கல்யாணின் நம்பிக்கை இருக்கிறது.

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை எந்திர ஆட்சி அமைந்தால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணிகளும் விரைந்து முடிவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அவர் ராஜ மகேந்திரவரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மதியம் 3.30 மணிக்கு ராஜ மகேந்திரவரம் தொகுதியில் உள்ள வேமகிரி என்ற இடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனக்கா பள்ளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.எம். ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆந்திராவில் வருகிற 13-ந் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக தொடர்ந்து 4 பொதுக் கூட்டங்களில் மோடி பேச உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.
    • பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடைய சகோதரி சர்மிளா தாக்கி பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதனை கேட்டதும் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்தால் போதும் அதனால் என்னுடைய சகோதரியை அரசியலுக்கு வர வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் கேட்காமல் தெலுங்கானா அரசியலில் இறங்கினார்.

    சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு எனது சகோதரியை ஆந்திர மாநிலத்தில் அரசியலில் களமிறக்கி உள்ளனர். இதனால் எனது குடும்ப உறவுகள் சீர்குலைந்துள்ளன. அரசியலில் இருந்தாலும் இருவரும் மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் எனக்கூறி எங்களுடைய தாயார் ஒதுங்கி இருக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும். தனி மனிதர்களை பார்த்து ஆதரவு அளிப்பது எனது நோக்கம் அல்ல. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்.

    பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சிறுபான்மையினர் மீதான அவரது கருத்துக்கள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.

    ராகுல் காந்திக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. ராகுல் குறித்து என்னுடைய கருத்து ஒருபோதும் பாரபட்சமற்றதாக இருக்க முடியாது. என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.

    எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி முயற்சி செய்தது. அதேபோல் ராகுல் காந்திக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை என்ற நிலையில் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டி, ராகுல் காந்திக்கு ஆதரவு இல்லை என தெரிவித்திருப்பதன் மூலம் அவர் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஆந்திராவில் 25 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் மோடிக்கு தான் ஆதரவு கிடைக்கும் என பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
    • சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.

    இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
    • காங்கிரசால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திர மாநிலம் ஒரு அடி முன்னேற்றம் காணவில்லை. சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியால் எந்தப் பயனும் இல்லை.

    இருவரும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்தும், மற்றொருவர் மறைமுகமாகவும் பா.ஜ.க.வின் கைக்கூலியாக உள்ளனர்.

    ஆந்திராவுக்கு மீள முடியாத வீழ்ச்சியை பா.ஜ.க. கொடுத்துள்ளது. மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அந்த கட்சி, மோசடி செய்துவிட்டது. போலவரம் திட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்து விட்டது. உண்மை நிலவரம் இப்படியிருக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன.
    • ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தினந்தோறும் விதவிதமான அறிவிப்புகளை அறிவித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

    ஸ்ரீகாக்குளம் பகுதியில் பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த தனி பஜார் நிறுவப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு 3 சென்ட நிலத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்.

    மேலும் முதியோர் ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றார். ஏற்கனவே ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    மாதந்தோறும் உதவித் தொகை என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு மேலும் பெண்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் பெண்களின் கவனம் ஒட்டுமொத்தமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பி இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
    • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.

    தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.

    வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.

    ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
    • சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

    கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

    சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
    • சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், மனைவி புவனேஸ்வரியும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறையை மீறியதாக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    தங்கள் மீதான வழக்குகளால் தேர்தலில் மனுதாக்கல் செய்ய ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமா? என சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்கள் மூலம் ஆலோசனை நடத்தினார்.

    • சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
    • கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று முன்தினம் பஸ் யாத்திரை பிரசாரம் செய்தார். அப்போது அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

    அடுத்தடுத்த கல் வீச்சு சம்பவங்களால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சந்திரபாபு நாயுடு பிரசாரக் கூட்டத்தில் விளக்கமளித்து பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டி கல் வீச்சில் காயம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் மீது கல்வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் ஒரு நாடகம் போல் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் பவன் கல்யாண் மீது கற்களை வீசப்பட்டது. இந்த சம்பவத்தை ஜெகன்மோகன் ரெட்டி கண்டிக்கவில்லை. பொது மக்கள் வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
    • சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.

    கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.


    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×