என் மலர்
நீங்கள் தேடியது "Achievements"
- பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
- கண்களை கட்டிக்கொண்டு கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(வயது 14). இவர் 9- ம் வகுப்பு படித்து வரு கிறார்.
இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத் துள்ளார். மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.
உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனை கள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
மேலும் இளம் வயதி லேயே 3 முனைவர் பட்டங் களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இந்த மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது .
இந்த நிலையில் 70-வது உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு இன்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.
30 சாதனைகள்
பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட் களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப் பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண் களை கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகை களை அதிக எண்ணிக்கை யில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண் களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வு களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
- டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
- பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.
நெல்லை:
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பாளை அரசு அருங்காட்சி யகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மஹன்யா, 3-ம் வகுப்பு மாணவன் பிரணவ் கார்த்திகேயன் மற்றும் மஹிந்தேவ் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர். நெல்லை பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெமினா ஷர்மி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வல் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் வி.பி. ராஜன் சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் வனிதா கண்ணதாசன், சாந்தா கருப்பசாமி, அஜித்குமார், இலக்கிய அணி அரசு, முத்து, தொண்டரணி பிரபு, முருகேசன் குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்அரசு நன்றி கூறினார்.
கொல்லங்குடி
காளையார்கோயில் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கொல்லங்குடியில் அவைத்தலைவர் சுப. தமிழரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம். கென்னடி முன்னி லையில் அரசின் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, கண்ணாத்தாள், தென்னரசு, செல்லப் பாண்டி, சுப.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சுசீந்திரன் சந்திரன், நேரு, சதீஷ்குமார், அசோக், ஜெயராஜ், மிலிட்டரி பிரபு, ஆகாஷ், சீனிவாசன், பாலமுருகன், முருகன், முக்கையா, முருகன், நைனா, நாட்டரசன்கோட்டை பேருர் செயலாளர் ஜெயரா மன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.
- இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும் என ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பேசினார்.
- போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, செய்யது அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் தலைமை தாங்கி இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளை ெதாடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
கல்லூரியில் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. படித்து முடித்து வெளியே வந்து ஒரு இலக்கை பெறுவதற்கு நாம் படும் சிரமத்தை அளவிட முடியாது. அதனால் தான் படிக்கும்போேத ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் லட்சியம் என்ன? என்று திட்டமிட்டு செயல்பட்டு படித்தால் அந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடும்.
இதே போல் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றி என்னும் இலக்கு உங்கள் அருகாமையில் உள்ளது.
படிக்கும் காலத்தில் எதிர்காலத்தின் திட்டத்தை நினைத்து அதற்கேற்ப படித்து சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் சாதனை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், முகமது சதக் தஸ்தகீர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது அம்மாள் கல்லூரி வள்ளி விநாயகம், பரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,
மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
- இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
- சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
நெல்லை:
பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ெதாடர்ந்து 11-வது ஆண்டாக மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதில் எந்திரா தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், ஷிவானி கிருத்திகா தமிழ், கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதேபோல் மாணவி ஸ்ரேயா மதுபாலா 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பர்ஹின், நித்யஸ்ரீ, ஸ்ருதி ஜெனி, ஜீனஸ் ஜெயந்தி ஆகிய 4 பேரும் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். இவர்கள் 4 பேரும் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் நித்ய ஸ்ரீ 100க்கு 100-ம், அறிவியல் பாடத்தில் ஸ்ருதி ஜெனியும், கணிதத்தில் பர்ஹின் 100 மதிப்பெண்களும், பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் தமிழில் 36 மாணவர்களும், கணித பாடத்தில் 9 மாணவர்களும், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், இந்தியில் ஒரு மாணவனும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 120 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழில் 67 பேரும், ஆங்கிலத்தில் 102 பேரும், கணிதத்தில் 103 பேரும், அறிவியலில் 108 பேரும், சமூக அறிவியலில் 62 பேரும், இந்தியில் 12 பேரும் ஏ1 தரத்தை பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
- புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.
புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வளராலம். என்றார்.
- தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
- தி.மு.க அரசின் சாதனைகளையும், கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர செயலாளர் சுப்ராயன் மற்றும் சீர்காழி, கொள்ளிடங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்.சேது ரவிக் குமார், மலர் விழி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களிடையே தி.மு.க அரசின் சாதனைகளையும், திமுக கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ.கே. செந்தில் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக் கூறினார்.