search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bail"

    • இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
    • பாகிஸ்தானில் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது என்றார் இம்ரான் கான்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதம மந்திரியான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று இம்ரான்கான் ஆஜரானார்.

    அப்போது ஒரு நீதிபதி, லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சித்தலைவராக உள்ள இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியது என்றார்.

    இந்நிலையில், நீதிபதிகள் முன் இம்ரான்கான் பேசுகையில், இந்தியாவில் பொதுத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தேர்தல் நடந்த பிப்ரவரி 8-ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • இடைக்கால ஜாமின் முடிந்து கெஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.

    இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால 7 நாட்கள் ஜாமின் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • போக்சோ வழக்கில் இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கேவலமானது.
    • குற்றம் சாட்டப்பட்டவர் தனது திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.

    மத்தியப்பிரதேசத்தில் மைனர் பெண்ணை வாட்சப் வழியாகவும் மொபைல் போன் வழியாகவும் ஆபாசமாக பேசி துன்புறுத்தியதாக கூறி ஏப்ரல் 4 ஆம் தேதி போக்சோவின் கீழ் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இளைஞரின் குடும்பம் நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வருகிறது என்பதை காரணமாக காட்டி கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இளைஞரின் ஜாமின் மனுவை மே 16 அன்று நீதிபதி ஆனந்த் பதக் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் மகன் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறோம் என்றும் அதே நேரத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டான் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறைத்தண்டனை விதித்தால் மாணவரின் கல்லூரி வாழ்க்கை பாதிக்கும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் ஒரு நல்ல மனிதனாக மாறுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என்றும் இனிமேல் எந்த விதத்திலும் அந்த மைனர் பெண்ணுக்கு அவர் எந்த சங்கடத்தையும் அல்லது துன்புறுத்தலையும் ஏற்படுத்த மாட்டார்" என்று உத்தரவாதம் அளித்தார்.

    ஆனால் அரசு தரப்பு இளைஞருக்கான ஜாமீனை எதிர்த்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வாட்ஸ்அப் மூலமாகவும் , மொபைல் போன் மூலமாகவும் பாதிக்கப்பட்டவரை எந்த நேரத்திலும் அழைத்து துன்புறுத்தியுள்ளார் என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கேவலமானது என்றும் அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும், ஆகவே போபால் மருத்துவமனையில் 2 மாதங்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கினார்.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போபால் மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் உதவி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
    • கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேடப்படும் குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்பவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும், இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை பிடிப்பதற்காக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    ஆபரேசன் ஏ.ஏ.ஜி. மற்றும் ஆபரேசன்-டி என்ற பெயரில் கடந்த 6 நாட்களாக மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். போலீசாரின் இந்த ஆபரேசனில் ரவடிகள், தலைமறைவு குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்றவர்கள், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என 12ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கேரள மாநில ஜெயில்களில் கைதிகளை அடைக்க இடம் இல்லை. இதன் காரணமாக போலீசார் நடத்திய சிறப்பு ஆபரேசனில் கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கண்ணூர், விய்யூர் ஜெயில்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் தற்போது கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் 500 பேர் மட்டுமே ஜெயிலிகளில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 500 பேர் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    727 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய பூஜப்புரா மத்திய ஜெயிலில் 1,350 கைதிகளும், 585 கைதிகள் அடைக்கப்படவேண்டிய விய்யூர் ஜெயிலில் 1,110 கைதிகளும், 856 கைதிகள் அடைக்கப்படவேண்டிய கண்ணூர் ஜெயிலில் 1,140 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    • சவுக்கு சங்கரை கோவை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
    • சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    • ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது.

    இந்நிலையில், பெண்ணை கடத்திய வழக்கில், ஜேடிஎஸ் எம்எல்ஏ ஹெச்.டி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஹெச்.டி. ரேவண்ணா ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள, பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

    • செந்தில் பாலாஜி ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்.
    • கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை கூறி இருப்பதாவது:-

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. வழக்கின் விசாரணையிலும் அவர் முட்டுக்கட்டை போட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

    எனவே செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்கக் கூடாது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

    இவ்வாறு பதில் மனுவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருக்கிறார். எனவே சற்று நேரம் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

    அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு தான் பதில் மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்வதன் மூலமாக இந்த வழக்கு விசாரணையை அவர்கள் தாமதப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்' என்றனர்.

    இதையடுத்து நீதிபதிகள், 'பதில் மனுவை காலதாமதமாக தாக்கல் செய்திருப்பதால் எந்தவித பலனும் இல்லை' என்றனர்.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், 'கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், 'அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்து பார்க்கவில்லை. எனவே எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    ×