என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பாகிஸ்தான்
- புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
- கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இம்ரான்கான் அறிவித்தார்.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவராக உள்ளார். அவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. பதவி விலகிய அவர்மீது இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரதமராக இருந்தபோது பரிசுப்பொருள் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியின் சின்னமான 'கிரிக்கெட் மட்டை' சின்னத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள 20 நாளுக்குள் புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சித் தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.
கடந்த திங்களன்று நடைபெற்ற கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமானவரான பாரிஸ்டர் கோஹர் கான் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
- இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
- இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதை பார்த்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர்.
இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.
அதே போல் இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கவுரவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கராச்சி:
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.
இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.
- இந்து குஷ் மலைத்தொடர் 800 கிலோமீட்டர் நீளம் உள்ளது
- தலிபான்களால் தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைவதாக கலாஷ் மக்கள் அச்சப்படுகின்றனர்
இமயமலைக்கு மேற்கே, மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வடகிழக்கு பாகிஸ்தான் வழியாக தென்கிழக்கு டஜிகிஸ்தான் வரை நீண்டு செல்வது இந்து குஷ் (Hindu Kush) மலைத்தொடர்.
சுமார் 800 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த மலைத்தொடரில் மலையேறுதலுக்காகவும் இங்குள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் சுற்றுலாவிற்கும் அயல்நாட்டினர் வருவது வழக்கம்.
பாகிஸ்தானுக்கு உட்பட்ட இந்த மலைத்தொடரின் இயற்கை அழகு மிகுந்த பள்ளத்தாக்கு பகுதி, கலாஷ் (Kalash).

கலாஷ் பள்ளத்தாக்கை சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவாய் ஈட்டுகின்றனர்.
கலாஷ் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பாகிஸ்தானி தலிபான் (Tehrik-e Taliban Pakistan) எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேருக்கும் மேல் அந்த பகுதியை ஆக்ரமிக்க முனைந்து அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்தனர். அப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த தயாராகினர்.
இதையறிந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உடனடியாக ஒரு படையை அனுப்பி தலிபான்களின் திட்டத்தை முறியடித்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் 5 பேரும், தலிபான் தரப்பில் 20 பேரும் உயிரிழந்தனர்.
2021லிருந்து தங்கள் நாட்டின் மீது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அந்நாடு தடுக்க தவறி விட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசு இதனை மறுத்து வருகிறது. கலாஷ் பள்ளத்தாக்கை தலிபான் கைப்பற்றினால், பாகிஸ்தான் மீது அடுத்தடுத்த தாக்குதல் நடத்துவது எளிதாக இருக்கும் என்பதால் இதனை கைப்பற்ற தொடர்ந்து தலிபான் முயன்று வருகிறது.
இந்நிலையில், கலாஷ் பள்ளத்தாக்கில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் இத்தனை நாட்கள் அமைதியாக வாழ்ந்து வந்த தங்கள் வாழ்க்கை குறித்து அச்சப்பட துவங்கியுள்ளனர்.

கிரேக்க பேரரசரான அலெக்ஸாண்டரின் வம்சமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் கலாஷ் மக்களின் கலாச்சாரம், பாகிஸ்தானிய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. பல பெயர்களிலும் வடிவங்களிலும் ஆண், பெண் தெய்வங்களை வழிபட்டு, விவசாயத்தை போற்றும் விதமாக பண்டிகைகள் கொண்டாடும் இந்த அமைதியான மக்கள், தலிபானால் மதமாற்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள பண்ணை வேலைகள், விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதார பணிகள், தலிபான்களின் தாக்குதல்களால் சீர்குலைந்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தலிபான் தாக்குதல்கள் இனியும் நடந்தால், அதை வெற்றிகரமாக முறியடிப்போம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
- பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 10 மாதங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 386 பேர் பலியாகி விட்டனர். இதனால் பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கைபர் பக்துன்குவா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் உள்ள கிரி மசான் சேல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
- நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து முடிவு.
- டி20 போட்டி, டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்களை அறிவித்தது பாகிஸ்தான்.
கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இன்று மாலை பாபர் ஆசாம் அறிவித்திருந்தார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.
"இது கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்" என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை அதன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.
- 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.
லாகூர்:
உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டும் வென்று, 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரசாக், யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.
பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரராக இருப்பவரும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது.
உண்மையில் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.
பக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருவர் திருமணம் செய்தால் அது சாத்தியமில்லை என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பெயர் அப்துல் ரசாக். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் கிரிக்கெட் மற்றும் பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேசும்போது நான் ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் இன்னொரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்பினேன். அதைச் செய்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.
லாகூர்:
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, அண்டை நாடான இலங்கையில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
- பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.
பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.
கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.
பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.