என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் மர்மக் கும்பல் துப்பாக்கிச்சூடு: 4 போலீசார் உயிரிழப்பு
    X

    பாகிஸ்தானில் மர்மக் கும்பல் துப்பாக்கிச்சூடு: 4 போலீசார் உயிரிழப்பு

    • போக்குவரத்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு.
    • காவல் நிலையத்திற்கு சென்ற போலீசார் மீதும் துப்பாக்கிச்சூடு.

    பாகிஸ்தானில் உள்ள பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். லக்கி மார்வாத் மற்றும் பன்னு மாவட்டங்களில் இந்த துப்பாச்சிசூடு சம்பங்கள் நடைபெற்றுள்ளது.

    மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மக் கும்பல், சரை நவுரங் நகரில் போக்குவரத்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.

    மந்தான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீசார் கொல்லப்பட்டனர். போலீசார் வீட்டில் இருந்து காவல் நிலையத்தில் ரிப்போர்ட் அளிக்க செல்லும்போது, துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    Next Story
    ×