என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைபர் பக்துன்க்வா"

    • இரண்டு மாவட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
    • ஒரு இடத்தில் 3 பேரும், ஒரு இடத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானின் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது கைபர் பக்துன்க்வா மாகாணம். இந்த மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்போதும் பதற்றமான நிலையிலேயே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பயங்கரவாதிகள் இங்குதான் பதுங்கியிருக்கின்றனர். மலைகள் அடர்ந்த இந்த மாகாணம் மறைந்து இருப்பதற்கு ஏற்றாற்போல் உள்ளதால், பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை இங்கே மாற்றி வருகின்றனர்.

    இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. அடிக்கடி குண்டு வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில்தான் நேற்று கோஹத் மற்றும் கராக் மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    பாசித் கெல் அருகே போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கராக் மாவட்டத்தின் மிர் கலாம் பண்டா என்ற பகுதியில் ரகசிய தகவின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகள் உள்ள பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது.
    • இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பொது மக்கள் பலர் உயிரிழந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது. இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

    கைபர் பக்துன்க்வா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். நிலப்பரப்பை மலைகள் சூழ்ந்துள்ள இந்த மாகாணம் இயற்கையாகவே மறைவிடத்திற்கு வழிவகுத்துள்ளது.

    சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், தங்களுடைய தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
    • 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரம்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் படையினர் ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது. ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.

    • பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணிகளைச் சித்திரவதை செய்து பேருந்துக்குத் தீவைத்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று (மே 26) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய TTP பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பேருந்தை தீவைத்து எரித்து சாம்பலாக்கிய பின் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

     

    • ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார்.
    • கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பகதுன்க்வாவில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த குண்டு வெடிப்பில் ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார். ஹமிதுல் ஹக் ஹக்கானி 1968-ம் ஆண்டு, அவரது தந்தை உயிரிழந்த நிலையில் ஜே.யு.ஐ. அமைப்பின் தலைவர் ஆனார்.

    இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என கைபர் பகதுன்க்வா ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ஹமிதுல் ஹக்கை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×