என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலி
    X

    பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலி

    • பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலியாகினர்.
    • பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெறுவது வழக்கம். எனவே அங்குள்ள டேங்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதி ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×