search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-bribery"

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தினர்.
    • சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாண்டியன் நகர் 3-வது தெருவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் அதிர டியாக அலுவலகத்துக்குள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அலுவலக கண்காணி ப்பாளர் மருதநாயகம் அறைக்கு சென்று சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் குறித்து அ வரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்க வில்லை.

    இதனைத் தொடர்ந்து கணக்கில் வராத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்குள்ள அலுவலர்களிட மும் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் அரசு அலுவலர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து அளிக்கும் புகார்களின் அடிப்படையில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் தற்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    நாகர்கோவில்:

    பத்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் புரோன் விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    கிராம நிர்வாக அதிகாரி முத்து (வயது 49) என்பவர் புரோன் கொடுத்த மனுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் நேரில் சந்தித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசியபோது ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவதாக கூறியுள்ளார். இது குறித்து புரோன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி முத்துவை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை புரோனிடம் கொடுத்து அனுப்பினார்கள். கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அதிகாரி முத்துவிடம் புரோன் ரூ.500 நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. எக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களையும் போலீசார் சரி பார்த்தனர்.

    அப்போது பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். சுமார் 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் குழித்துறையில் கிராம நிர்வாக அதிகாரி முத்து தங்கி இருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ராயகிரி ஆகும். 

    • துணை மேலாளர் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.
    • மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலகு அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் நடத்தப்பட்டது.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலகு 1 அலுவலகத்தில் உள்ள துணை மேலாளர் அலுவலகம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.

    இந்த அதிரடி சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்த தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது.

    சேமிப்பு கிடங்கு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெட்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து மணி நேர சோதனையில் முடிவில் மொத்தமாக 1லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்த கோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது குறித்து 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.

    மதுரை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தை நடத்தினர். அவர்கள் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.

    மேலும் பரீட்சையில் தோல்வி அடைந்த வர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்துள்ளனர் என்ற புகார்கள் வெளியானது.

    இதையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அப்போதைய கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ராஜராஜன், சூப்பிரண்டுகள் சத்தியமூர்த்தி, ராஜ பாண்டி, பல்கலைக்கழக அதிகாரி கார்த்திகை செல்வன், கேரள மாநிலம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த கல்வியாளர் ஜிஜி, மலப்புரம் தொலைதூரக் கல்வி வளாகத்தைச் சேர்ந்த அப்துல்அஜீஸ், ஏ.கே சுரேஷ், திருச்சூர் கல்லூரி உயர்நிலை நிறுவன பொறுப்பாளர் ஜெயபிரகாசம் ஆகிய 8 பேர் மீது மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்தார்.

    இவர்களில் ராஜராஜன் பணியில் இருந்த போதே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அதன் பிறகு இறந்து விட்டார் என்பதால் மற்ற 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×