search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action Inspection"

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    ×