search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ"

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது.
    • குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில் காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி பெற கடுமையாக போராடினர். பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அதில் மந்திரிகளை சந்திக்க முடியவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து பேச முடியவில்லை என்றும் பரபரப்பான குற்றச் சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அது பா.ஜ.க.வின் சதிவேலை என்று தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கருத்து வேறுபாடுகளை களைந்து பணியாற்றுமாறும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சிலரை மீண்டும் காங்கிரசில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் காங்கிரசை சேர்ந்த பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்த்பூர்) மற்றும் சிவராம் ஹெப்பர் (எல்லாபூர்) ஆகியோர் அடங்குவர்.

    இதேபோல் ஜனதாதளத்தை சேர்ந்த கே.கோபாலையா (மகாலட்சுமி லேஅவுட்), தொட்ட நாகவுட் பாட்டீல் (குஷ்டகி) ஆகிய 6 பேர் ஆபரேசன் தாமரை மூலம் பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் சிலர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிலையில் பா.ஜனதாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பது மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் பா.ஜனதாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரியன் கார்கே கூறும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேர விரும்பினால் நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    2019-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து விலகி சென்றவர்களை அதேபாணியில் காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணையலாமா, வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டில இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.

    அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    • ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
    • பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

    ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.

    இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
    • இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக அனுராதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் மனு கொடுக்க சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் நேரம் கேட்டிருந்தார்.

    அதன்படி இன்று காலை அருள் எம்.எல்.ஏ. சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அனுராதா ஆய்வுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை புறக்கணித்ததாக கூறி அருள் எம்.எல்.ஏ. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிர்வாகிகளுடன் திடீரென தர்ணா போராட்டம் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரிடம் சமரச பேச்சுவாரத்தை நடத்தினர்.

    சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். திட்டப்பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டால் எந்த பதிலும் முறையாக தருவதில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். எனக்கு கவுன்சில் கூட்டத்துக்கு தகவல் அனுப்புவது இல்லை. ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் எங்கள் குறைகளை நேரம் ஒதுக்கி கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது.
    • காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.

    இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.

    இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.

    2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டாசுவாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.வுமான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா உள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.

    கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்.எல்.ஏ. கலிஜனார்த்த ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார்.

    கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா இடம்பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்கள் வெறும் ரூ.1700 தான். இவருக்கு அடுத்த்அ இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்தா முதுலிஒ பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே. மேலும் ரூ.18 ஆயிரத்து 370 சொத்துக்களை கொண்ட பஞ்ச்சாபின் நரீந்தர்பால்சிங் சாவ்னா 3-வது இடத்திலும், ரூ.24 ஆயிரத்து 409 மதிப்பு சொத்துகளுடன் பஞ்சாப் நரிந்தர் கவுர்பராஜ் 4-வது இடத்திலும், ரூ.30 ஆயிரம் மதிப்பு சொத்துடன் சார்க்கண் எம்.எல்.ஏ. மங்கள் கலிந்தியும் உள்ளனர்.

    • கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
    • குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

    அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர்.
    • சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அம்பாலா:

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அரியானா மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அம்பாலா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

    வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனநாயக் ஜனதா என்ற கட்சியின் எம்.எல்.ஏ. இஸ்வார்சிங் குலா என்ற பகுதிக்கு வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக சென்றார், அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தடுப்பணை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கோபத்துடன் அவர்கள் கூறினார்கள்.

    அந்த சமயம் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென ஆவேசத்துடன் இஸ்வார்சிங் எம்.எல்.ஏ வை பார்த்து "இப்ப எதுக்கு இங்கே வந்தீங்க" எனக்கூறி அவரை தாக்கினார். உடனே போலீசார் அந்த பெண்ணை மேலும் தாக்கிவிடாமல் இருப்பதற்காக தடுத்து நிறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தன்னை தாக்கிய போதும் அந்த பெண்ணை மன்னித்து விட்டதாகவும், அதனால் அவர் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் இஸ்வார் சிங் எம்,எல்.ஏ போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மஞ்சரியாலா பெல்லம் பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து பெண் அதிகாரி சேஜல் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் செய்தார்.

    அப்போது துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ அடிக்கடி எனக்கு போன் செய்து நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும். என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என பேசி வருகிறார் .

    மேலும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து தொல்லை கொடுத்தனர்.

    நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என புகாரில் கூறியிருந்தார்.

    மேலும் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    அவரிடம் முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்..ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

    அதனை ஏற்று சேஜல் போராட்டத்தை கைவிட்டார். மீண்டும் அவர் ஐதராபாத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் அதிகாரி சேஜல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பெண் அதிகாரி சேஜல் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் பெண் அதிகாரி சேஜல் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் துர்க்கம் சின்னய்யா எம்.எல்.ஏ.வின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது ஆட்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என எழுதியுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    • கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
    • 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

    இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.

    அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

    அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×