என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negotiation"

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்நூர் ஊராட்சி காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் சாலைவசதி செய்து தரகோரி சாலை மறியல் செய்தனர்.

    தகவலறிந்த இன்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சாலை மறியல் செய்த மக்கள் கூறியதாவது. கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்து க்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணி எம்.எல்,ஏ. சாலை போட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

    பள்ளி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகிறவர்கள் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவசர உதவிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வருவதில்லை. இப்பகுதியில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்தவர்கள்வசித்து வருகிறோம்.எங்க ளுக்கு உடனடியாகஇப்பகு தியில்சாலை வசதியை ஏற்்படுத்தி தர வேண்டும் என்ற னர்.உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் முன்னிலையிலும் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்தவாறு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சியில் 190 மீள்குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் காடந்தேத்தி பஸ் நிலையத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நேற்றைய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
    • நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினர். போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. தலைவர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தனர். 


    தொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், எஸ்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட 66 சங்க நிர்வாகிகளும் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அகவிலைப்படி உயர்வு குறிப்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

    ஓய்வுபெற்ற ஊழியர்களின் 81 மாதம் அகவிலைப்படி உயர்வை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் பிரதானமாக வைத்து நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
    • தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்து தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி யில் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரவேண்டிய நீரின்அளவு சரிவர வராத தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    பொது மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாள்தோறும் பேரூராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

    இதனால் பொதுமக்க ளுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியவில்லை மேலும் குடிதண்ணீர் குழாயில் சட்டவிரோதமாக பொதுமக்கள் மோட்டார் வைத்தும் தண்ணீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தலைஞாயிறு வலம்புரி சாலை, பள்ளி வாசல் தெரு, இடம்புரி ,சந்தைவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர்தண்ணீர் மிக குறைவாக வருவதாக கூறி முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் பேரூரா ட்சிக்கு வந்து செயல் அலுவலர் குகனிடம் முறையிட்டனர்..உடனடியாக களப்ப ணியில் இறங்கி செயல் அலுவலர் குகன் வீடு வீடாக சென்று நேரடியாக பார்வையிட்டு குடிநீர் தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்துதண்ணீர் சீராக கிடைக்க நடவடி க்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். குடிதண்ணீர் கேட்டு வார்டு கவுன்சிலர்கள் அப்துல் அஜீஸ் ,மாதவன், கூட்டுறவு சங்க முன்னாள்இயக்குனர் வீரகுமார்,வழக்கறிஞர் ஹைதர்அலி,

    ஜமாத் மன்ற உறுப்பினர் பக்ருதீன் உள்ளிடோர் பொதும க்களுடன் பேருரா ட்சி செயல் அலுவலரை சந்தித்தனர். பின்புமுன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாநில விவசாயிகள்கள் குழு உறுப்பினர் மகா குமார் உள்ளிட்டோர் பேருராட்சி செயல் அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்திசட்ட விரோதமாக எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் .பொது மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோரிககையைஏற்று செயல் அலுவலர் குகன் பொதுமக்களிடம்

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அறிவிப்பின்படி 13 ,14 , 15 ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் வழங்க இயலாது என்றும் அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்என்றும் தெரிவித்தார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சுங்கச்சாவடி உள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் உள்ளூர் மக்களிடம் ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்பதால் இங்கு அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல்களும் உருவாகி வருகின்றன. பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    ஆனால் சில நாட்களிலேயே அந்த உறுதி மொழியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் சுங்க கட்டணம் கேட்பார்கள்.தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் 2 ஆண்டுகளுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டுமென வக்கீல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுங்க நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொருவருக்கும் ரூ. 30 ஆயிரத்திலிருந்து, ரூ. 3 லட்சம் வரையிலும், கப்பலூர் தொழிற் பேட்டை வாகனங்களுக்கு ரூ. 1கோடி வரையிலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறைக்கு ரூ‌.28கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக அமைக்க ப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் உடனடியாக சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும் வரை திருமங்கலம், கப்பலூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மேலசெம்மங்குடி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெண்கள் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகளுக்கு ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பாபநாசம்- சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பருத்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் விலையை அதிகப்படுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதால் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

     நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வல ங்கைமான், பாடகச்சேரி, சித்தன்வாழூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள விவசாயி களின் பருத்தி ஏலம் விடப்படுகிறது.

    கடந்த வாரம் ஒரு கிலோ பருத்தி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் .விலையை அதிகப்ப டுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது தாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும், மனைவியின் நகைகளை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபடுவ தாகவும், உடனடியாக தமிழக அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து வலங்கைமான் காவல்துறை இன்ஸ்பெக்டர் விஜயா நேரில் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார்.. தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வந்த விவசாயிகளிடத்தில் வருவாய் ஆய்வாளர் சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போரா ட்டத்தை ஒத்தி வைத்தனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடந்த இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், விற்பனை குழு செயலாளர் சுரேஷ் பாபு, கண்காணிப்பாளர் தாட்சாயினி, துணை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் திருக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    வருகிற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் ஏலம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொ.மு.ச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிவகாசி

    தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் மு.சண்முகம் எம்.பி. மற்றும் பேரவையின் பொருளாளர் நடராஜன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின் தொ.மு.ச. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.

    பொதுவாகவே விடுப்பு எடுக்காமல் நீண்டகாலம் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களின் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய அமைச்சர் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வேலைக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

    அதுபோலவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரயம் செய்துவிட்டனர். தொழிலாளர்களின் பாதுகாவலனாக எப்போதுமே திகழ்கின்ற தி.மு.க. அரசு தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க.வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தொ.மு.ச. நிர்வாகிகளுடன் இணைந்து அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரான்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி இயங்கி வருகிறது.

    இங்கு வரும் லாரிகள் மூலம் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவு மண் ஏற்றி செல்ல படுவதாகவும், கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாகவும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை யில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதானகூட்டம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தூரில் நேற்று நடைபெற விருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் செந்தில் முன்னிலையில் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.

    ×