search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton Auction"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விற்பனை சங்கத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

     அவிநாசி : 

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,569 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6089 முதல் ரூ.7360 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் 10 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிகப்பு எள் கிலோ ரூ.133 முதல் ரூ.166 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.121 முதல் ரூ.157 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.50 ஆயி ரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
    • வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 09 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.88 கோடி ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409,

    சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,279/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,732 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,469 முதல் ரூ.7,520 வரையிலும், சுரபி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,300 முதல் ரூ.8,100 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

    எள்

    இதேபோல் 10 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.122 முதல் ரூ.169 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.126 முதல் ரூ.173 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.143 முதல் ரூ.176 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

    அடுத்த பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 301 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. 

    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப்பட்டி, புதுச்சத்திரம், மசக்காளிப்பட்டி, குட்டலா டம்பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம்பாளை யம், அனைப்பாளையம், வடுகம், குள்ளப்பநாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.

    ஏலத்திற்கு ஆர்.சி.எச் ரக பருத்தி 1270 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 8 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் 1 குவிண்டால் ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 885-க்கும்,

    கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 50-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எள் 40 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.139 வரையிலும் சிகப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.149 வரையிலும் வெள்ளை எள் கிலோ ரூ.153 முதல் ரூ.159 வரையிலும் விலை போனது. மொத்த தொகை ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
    • தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதி ர்ப்புறம், அமைந்துள்ளது.

    இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும். அந்த வகையில் தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

    தற்போது இரண்டாம் பட்டம் பருத்தி வரத்து அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளி க்கிழமை முதல், திங்கட்கி ழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் இன்று திங்கட்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் ஞான சேகர், செயலாளர் சாவி த்திரி, ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.

    • முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
    • வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.

    அம்மாபேட்டை, 

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.

    இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.

    இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.

    அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.

    • குடவாசல் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி பருத்தி ஏலம் நடக்கிறது.
    • கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    திருவாரூர்:

    குடவாசல் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம்.

    குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள அரசூர், மஞ்சக்குடி, புதுக்குடி, சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், இலையூர், செல்லூர், காங்கேயநகரம் ஆகிய கிராமங்களில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 1 மாதத்திற்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ததால் பருத்தி செடிகள் தொடக்கத்தில் பாதிப்படைந்தது.

    கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    ஆனால் இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திர உதவியுடன் களை வெட்டுதல், மண் அணைத்தல் ஆகிய பணிகளால் கூடுதல் செலவு ஆகியுள்ளது.

    பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை நன்கு உலர வைத்து குடவாசல் அகர ஓகை அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடக்கும் பருத்தி ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யலாம்.

    பிரதி வாரம் புதன்கிழமை தோறும் எந்த ஒரு இடைத்தரகர்களும் இன்றி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்துள்ள பருத்தியை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

    நிரந்தர பதிவு எண் ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து நிரந்தர பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது.
    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது. இங்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், மோகனூர், பரமத்தி, வேலூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்ப நாய்க்கன் பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,870 வரையிலும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,595 முதல் ரூ.5,395 வரையிலும் விலை போனது.

    மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

    ×