search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரத்தில் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
    X

    ராசிபுரத்தில் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

    • ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். நேற்று நடந்த ஏலத்தில் 3,646 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 3,572 மூட்டைகளும், கொட்டு பருத்தி 74 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,979-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,900-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,419 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,191-க்கும் ஏலம் விடப்பட்டது.

    Next Story
    ×