search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அமைச்சர்கள்"

    • ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.

    அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    • அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை.
    • பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதல்-அமைச்சராக கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார்.

    துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்து கடந்த மே மாதம் 27-ந் தேதி மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு 20 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் அந்த கடிதம் சமூக வலைதளத்திலும் வெளியானது.

    20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எங்களது சட்டமன்ற பணிகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். மேலும் அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை. 3-வது நபரின் உதவியுடன்தான் சந்திக்க வேண்டியதிருக்கிறது. இதனால் மக்களின் விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. 3-வது நபரின் மூலமாகத்தான் எங்களுக்கு அமைச்சர்கள் செய்திகளை பகிர்கின்றனர். நிதி திட்டங்கள் குறித்து அமைச்சரை சந்திக்க முடியவில்லை.

    உள்ளூர் எம்.எல்.ஏ.க்களாக இருந்தும் 3-வது நபரின் வாயிலாக அமைச்சர்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்கள் பேச்சை கேட்பதில்லை.

    எனவே முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.பாட்டில், ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.கிருஷ்ணப்பா, பிரியகிருஷ்ணா, அல்லம்மா பிரபுபாட்டில், விஜயானந்த் உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

    இந்த கடிதம் வெளியானதும் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் ஆலந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.ஆர்.பாட்டில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, மோசடிகளை தவிர்க்க எனது லெட்டர் பேடில் சீரியல் எண் பதிவிட்டு உள்ளேன். நேற்று வெளியான லெட்டர்பேடில் சீரியல் எண் எதுவும் இல்லை. எனவே இது மோசடியான கடிதம் ஆகும். இதில் பா.ஜனதாவின் சதிவேலை உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.

    இதேபோல் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் இது பொய்யான தகவல் என்று கூறினர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து எந்த பதிலும் கூறவில்லை. எனவே இது உண்மையான கடிதமா? அல்லது போலியாக பரப்பப்பட்ட கடிதமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. எனவே இந்த கூட்டத்தில் கடிதம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • சந்திப்பின்போது தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பதற்காக முழு மாநில அமைச்சரவையையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 21ம் தேதி அனைத்து அமைச்சர்களும் டெல்லி செல்லவுள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சித்தராமைய்யாவும், டி.கே.சிவக்குமாரும் பிரதமரை சந்திப்பது குறித்த உறுதியான தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த பயணத்தின் போது அவர்கள் மத்திய அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-

    அமைச்சர்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. அதனால், காங்கிரஸ் தலைவரின் அழைப்பின்பேரில் வரும் 21ம் தேதி அன்று அனைத்து அமைச்சர்களும் டெல்லிக்கு செல்கிறோம்.

    அங்கு, தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர். அரசாங்கமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கவே எங்களை அழைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×