search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர்"

    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாகவும், ஒரேகட்டமாகவும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

    பிறகு, பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி மகிழ்ந்தநார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது
    • ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

    • நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார் கிருஷ்ணம்
    • எது கட்சி விரோத நடவடிக்கை என கிருஷ்ணம் கேட்கிறார்

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்தவர், ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் (Acharya Pramod Krishnam).

    பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான கிருஷ்ணம், ஸ்ரீ கல்கி தாம் எனும் ஆன்மிக அமைப்பை நடத்தி வருபவர்.

    கிருஷ்ணம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2014 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச சம்பால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கிருஷ்ணம், பிப்ரவரி 19 அன்று நடைபெறும் ஸ்ரீ கல்கி தாம் அமைப்பின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதனையடுத்து, நேற்று காங்கிரஸ் தலைமை, கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணம் தெரிவித்ததாவது:

    பிரியங்கா காந்தி கட்சியில் அவமதிக்கப்படுகிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பிரியங்கா ஏன் பங்கேற்கவில்லை? காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்தாலும் அவருக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.

    இது காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே நடந்ததில்லை.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் (மல்லிகார்ஜுன் கார்கே) வெறும் ரப்பர் ஸ்டாம்ப். பிரியங்காவை அவமானப்படுத்த யார் உத்தரவிடுகிறார்கள்?

    கட்சியில் சச்சின் பைலட்டிற்கும் இதே நிலைதான். அவர் ஆலகால விஷத்தை உண்ட பரமசிவன் நிலையில் உள்ளார்.


    என்னை கட்சியை விட்டு நீக்கிய காங்கிரசுக்கு நன்றி.

    காங்கிரசின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் எது கட்சி-விரோத நடவடிக்கை என தெளிவுபடுத்த வேண்டும்: அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு செல்வதா அல்லது சனாதன தர்மத்தை மலேரியாவுடன் ஒப்பிட்டதை கண்டிக்க தவறியதையா?

    இவ்வாறு ஆசார்ய கிருஷ்ணம் தெரிவித்தார்.

    • ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார் ஷர்மிளா
    • திங்கள் அன்று கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார்.

    தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

    ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.

    கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில், இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர அரசியலில் சகோதரன்-சகோதரி போட்டி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    காஷ்மீர் மாநிலத்தை 370-வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும், அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரியலூரில் ரெயில் கவிழ்ந்ததற்கு ரெயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை தொடுத்தும் பாரதிய ஜனதா வாய் திறக்கவில்லை காரணம் அவர்கள் சர்வதிகாரிகள். எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள். மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு எம்பியை நீக்கம் செய்திருக்கிறார்கள் காரணம் அதானி பற்றியும் அதானி கம்பெனியை பற்றியும் கேள்வி எழுப்பியது காரணம். அவர் ஒன்றும் தேச துரோக குற்றம் செய்யவில்லை. தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை. அதானியை பற்றி பேசினாலே பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார். மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.


    மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. 40% அதிக அளவு வாங்கி இருக்கிறோம் வாக்கு எண்ணிக்கையிலும் எண்ணிக்கை அதிகம்.

    மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 2002ல் இதே போன்ற நிகழ்வு அந்த மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது. அப்போது சத்தீஸ்கர். ராஜஸ்தான். மத்திய பிரதேசம். நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். பாராளுமன்றத்தை கைப்பற்றினோம்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது எந்த ஒரு நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது ஆனாலும் அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் யார் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் தான் இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது இது மனித குற்றம் அல்ல இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல்.

    எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். 6000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.

    ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    • ம.பி.யில் வரும் நவம்பர் மாதம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது
    • கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது

    இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

    ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

    மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவருக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

    இந்த தருணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக முன்னாள் ஐ.ஏ.ஐ சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

    தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பினார். இதனால், கட்சி மேலிடத்தில் சசிகாந்த் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், பாஜகவின் மாநில தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலைக்கு போட்டியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ்-ஆன சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • சந்திப்பின்போது தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பதற்காக முழு மாநில அமைச்சரவையையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 21ம் தேதி அனைத்து அமைச்சர்களும் டெல்லி செல்லவுள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சித்தராமைய்யாவும், டி.கே.சிவக்குமாரும் பிரதமரை சந்திப்பது குறித்த உறுதியான தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த பயணத்தின் போது அவர்கள் மத்திய அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-

    அமைச்சர்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. அதனால், காங்கிரஸ் தலைவரின் அழைப்பின்பேரில் வரும் 21ம் தேதி அன்று அனைத்து அமைச்சர்களும் டெல்லிக்கு செல்கிறோம்.

    அங்கு, தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து எங்களுடன் விவாதிக்கவுள்ளனர். அரசாங்கமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கவே எங்களை அழைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,

    திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.

    தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • வரும் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
    • ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி நிருப ர்களிடம் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி முன்னா ள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறவழியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வரும் 15-ந் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். 16ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும். 20ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போரா ட்டம் நடத்தப்படும். 24ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமருக்கு கண்டன கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 2ம் கட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    பேட்டியின் போது பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணிய மூர்த்தி, கணேசன், மாவட்ட பொது செயலாளர் நரே ஷ்குமார், நகர ஆலோசகர் மணிராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×