search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழைப்பு"

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • வருகிற 1-ந் தேதி கடைசி நாள் என அறிவிப்பு

    புதுக்கோட்டை, நவ.20-

    புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்த்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்–கங்–கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு அச்சகம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை விண்ணப்பிக்கலாம்.

    பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்–ப–வர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்–டணம் செலுத்தியதற்கான ரசீதினை புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்–ணப்–பிக்கலாம்.

    மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.drbpdk.in வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (துணைப்பயிற்சி நிலையம்) 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாட்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தினை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து 750 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விண்ணப்பிக்க நவம்பர் 10-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு

    அரியலூர்,

    தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஆகியோர்களில் சிறந்தோருக்கு "அண்ணல் அம்பேத்கார்விருது" வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதினை பெறவிரும்பு வோர்அன்யலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங் குடியினர்நல அலுவலர் அல்லது தனிவட்டாட்சியர்(ஆதிந), அரியலூர், உடையார்பாளையம் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தரலாம். அதற்கான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நல அலுவலகத்திற்கு 10.11.2023 மாலை 5.00 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்க பா.ஜ.கவினர் வெற்றிலை, பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்
    • மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று அசத்தல்

    புதுக்கோட்டை,

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். வருகிற 6-ந்தேதி அவர் புதுக்கோட்டையில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் திரளானோரை பங்கேற்க செய்வதற்கு ப.ஜ.க.வினர் விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.இதன் ஒரு கட்டமாக பா.ஜ.க.வினர் நூதன முறையில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். புதுக்கோட்டை கீழ 3-ம்வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மகளிர் குழு உறுப்பினர்களுக்குவழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏ.வி.சி.சி. கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் லெட்சுமணன், சக்திவேல் முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் மனோகர்,ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், சக்திகேந்திர கூடுதல் பொறுப்பாளர் கைலாஷ், நகர நிர்வாகிகள் ஆனந்த்,செந்தில்குமார், ரங்கநாதன்,இளங்கோ, சுப்பிரமணியன்,கண்ணன், ராஜேந்திரன்,ரஜினி,ரவி, சாய்லெட்சுமி,கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி அழைப்பு விடுத்தனர்.நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை தட்டில் வைத்து, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்று நூதன முறையில் அழைப்பு கொடுத்தார்கள். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ள தாவது-

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வ தேச அளவிலான போட்டி களில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் வகை யில், அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கோடை கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளை யாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஒ.சி.) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ஐ.எஸ்.எப்.) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பி யன்ஷிப் போட்டிகள்,

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டு களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஐ.ஒ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப். -ன் கீழ் நடத்தப்ப டும் காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள்,

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளை யாட்டு சங்கம், காது கேளாதோ ருக்கான சர்வதேச விளை யாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளை யாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

    அதன்படி தேசிய விளை யாட்டு போட்டிகள், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பு களால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள். மாநில அளவி லான சாம்பியன்ஷிப் போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

    எனவே அரியலூர் மாவட் டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுத லின்படி 3 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங் கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது.

    விண்ணப்பத்தினை பதிவி றக்கம் செய்து உரிய இணைப் புகளுடன் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் மேற்கா ணும் இணையதள முகவரி யிலோ அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்

    மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித் துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இய க்குநர் பெரியசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களாகிய விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், நுண்ணீர் பாசனமுறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முதலான மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பிற விவசாயிகளும் இவற்றைப் பின்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநரிடம் உத்தேச அறுவடை தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்பிக்க வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கும் விவசாயி அறுவடை தேதியைத் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநரிடம் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி தொடர்பு மையத்துக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது
    • 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-2 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தகவல் மற்றும் கல்வி தொடர்பு மையம் அமைத்திட பணியிடங்களுக்கு வெளி முகமையின் நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடங்கள் 2, திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடம் ஒன்று, கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடம் ஒன்று, தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் 2 நிரப்பட உள்ளன.

    திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., , எம்.அண்டு இ. துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.

    திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., எம்.அண்டு இ.துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம்: ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. அல்லது இதற்கு நிகரான

    பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் மாஸ் கம்யூனிகேசன், மாஸ் மீடியாவில் முது நிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறை சமூக ஊடகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவம். கணினித்திறன் பெற்றிருத்தல் வீடியோ தயாரித்தல், மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்ற அனுபவம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக் காட்சி திறன், தமிழ் கிராமிய கலாச்சாரம் பற்றிய புரிதல் ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கலெக்டர் கற்பகம் அழைப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்ப விடுத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி,  கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆர்.எஸ்.மாத்தூர் ஆகிய பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பருத்தி பயிருக்கு அக்.31 ஆம் தேதி வரையிலும், நெல் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு நவ.15 ஆம் தேதி வரையிலும், உளுந்து பயிருக்கு நவ.30 ஆம் தேதி  வரையிலும், நிலக்கடலை பயிருக்கு பிப்.15 ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

    ×