மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவிய போட்டிகள்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவிய போட்டிகள்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்
மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவிய போட்டிகள்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்க–ளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்ப–டுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக்கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கர் நாடக இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நட–னங்கள் மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனும–திக்கப்படும். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நட–னம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங் கள் நடனமாட அனுமதிக்கப்படும். குரலிசைப் போட்டியில் கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்பு–ணர்ச்சிப் பாடல்கள், நாட் டுப்புறப் பாடல்கள் ஆகிய–வற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்க வாத்தியக் கருவி–களை, பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள–லாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஓலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. ஓவியப் போட்டிக்கு 40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த–வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமை–யலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவை–யானவற்றைப் போட்டியா–ளர்களே கொண்டு– வருதல் வேண்டும். குழு–வாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்கின்றவர்கள் அரிய–லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ள–வர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றி–தழ்களுடன், அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 26.02.2023 (ஞாயிற் றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு வருகை தர–வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com