என் மலர்
நீங்கள் தேடியது "New Road"
- மானாசாலை-தேளி இடையே புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
- முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாசாலை - தேளி இடையிலான சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலை விற்கு நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
மானாசாலை-தேளி இடையிலான தரம் உயர்த்தும் வகையில் போடப்படவுள்ள இந்த புதிய சாலைப்பணியால் வீரசோழன், மானாசாலை, தேளி, கொட்டகாட்சி யேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவார். பொதுமக்கள் வீரசோழன் பகுதிக்கும், வீரசோழன் பகுதியிலுள்ள பொது மக்கள் மானாமதுரை பகுதிக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருஞ்சிறை ெரயில்வே கேட் வழியாக சுற்றி சென்று மானாமதுரைக்கு செல்வது தடுக்கப்பட்டு எளிதாக சென்று சேரும் வகையில் இந்த புதிய சாலை அமைய உள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்ப தோடு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் காளீஸ்வரி சமயவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராசு, டி.வேலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக் குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது.
முத்துக்கும ரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு தார்சாலையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடந்தது.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன். தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தார் சாலையை திறந்து வைத்து, மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு. தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன், துணைத் தலைவர் ரேணுகா தேவிபெருமாள்ராஜ், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி, ஒன்றிய கவுன்சிலர் அரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பீஞ்சமந்தை மலைக்கு என அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
- புளியங்குடி நகராட்சி சார்பில்அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
- புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது,
புளியங்குடி:
புளியங்குடியில் சாலை மற்றும் வாறுகால் கட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தி அமைச்சர் நேருவிடம் நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார். இதுபற்றி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கூறுகையில், புளியங்குடி நகராட்சி சார்பில் நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு பொது கழிப்பிடங்கள் சீரமைக்கப்படுகிறது.
மேலும் புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, தற்போது வாறுகால் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா ஆலோசனையின் பேரில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து புளியங்குடி நகராட்சிக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். அமைச்சரும் உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.
- கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
- 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.
அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பூமி பூஜை நடந்தது
- ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
ஜோலார்பேட்டை:
முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் சாலை வழியாக மண்டலவாடி காமராஜ் நகர் முதல் கலந்தரா கூட்டுரோடு வரை வரை 1 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. ஜி. சரவணன், க.உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன் வரவேற்றார்.
இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று துவக்கி வைத்தார்.
பொதுமக்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
- சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
ராஜபாளையம்
சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வை ராஜபா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
ராஜபாளையம் சொக்கர் கோவில் முதல் நேரு சிலை வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டபோதும் தற்போது குண்டும் குழியு மாக காணப்படுகிறது இத னால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதிய சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
அப்போது, அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை யிடம் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலா ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.
- லயன்ஸ் டவுன் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
- அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்தல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் வேண்டும் என்று மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள்புரம், பிரையன்ட் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பிரையன்ட் நகர் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்றதால் அப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் என அதிகாரிகள் மேயரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து லயன்ஸ் டவுன் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்தல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வரும் நாட்களில் அதனை நிறைவேற்றி தருவதாக பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பின ருமான சுரேஷ் குமார் ராம கிருஷ்ணன், கவுன்சிலர் ரெக்ஸ்லின், முன்னாள் கவுன்சிலர் பாலன், ராஜா,தி.மு.க. நிர்வாகிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வெள்ளரிக்காயூரணி தனி பைப் லைன் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
- சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நாசரேத்:
நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தானியாநகர்- மணிநகர்- கந்தசாமிபுரம் இணைப்பு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் வெள்ளரிக்காயூரணி தனி பைப் லைன் பணி தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி இணைப்பு புதிய சாலை மற்றும் பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வ குமார், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, பத்ரகாளி, ஜஜினஸ்குமார், ஜெயா, ரவீந்திரன், இளநிலை பொறியாளர் விஜயகுமார், தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், பைப் லைன் பிட்டர் எட்வின், மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
- சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஊட்டி
குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி மற்றும் நகர மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ், கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சையது மன்சூர் நன்றி கூறினார்.
- சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் குறிப்பாக 37-வது வார்டுக்கு உட்பட்ட
மங்கம்மாள் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. சமீபத்தில் அந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல சேர்மன் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.