search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.

    ராஜபாளையம்

    சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வை ராஜபா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    ராஜபாளையம் சொக்கர் கோவில் முதல் நேரு சிலை வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.

    தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டபோதும் தற்போது குண்டும் குழியு மாக காணப்படுகிறது இத னால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதிய சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

    அப்போது, அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை யிடம் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலா ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    Next Story
    ×