search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nasareth"

    • வெள்ளரிக்காயூரணி‌ தனி பைப் லைன் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
    • சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நாசரேத்:

    நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தானியாநகர்- மணிநகர்- கந்தசாமிபுரம் இணைப்பு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் வெள்ளரிக்காயூரணி தனி பைப் லைன் பணி தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை தாங்கி இணைப்பு புதிய சாலை மற்றும் பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வ குமார், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, பத்ரகாளி, ஜஜினஸ்குமார், ஜெயா, ரவீந்திரன், இளநிலை பொறியாளர் விஜயகுமார், தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், பைப் லைன் பிட்டர் எட்வின், மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக குடியரசு தின விளையாட்டு விழா திருமறையூரில் நடைபெற்றது.
    • முன்னாள் ராணுவ வீரர் ராஜசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக குடியரசு தின விளையாட்டு விழா திருமறையூரில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ -மாணவிகளுக்கும், முதியோர் இல்ல ஆண்கள், பெண்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இவ்விழாவில் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தன்ராஜ் ஜேக்கப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் தம்பு என்ற அருன் சாமுவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ராஜசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தொழிலதிபர் சேகர், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மெட்டில்டா, செவித்திறன் குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி கரோலின், முதியோர் இல்ல பொறுப்பாளர் ஜான்சி ராணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வி.ஜெபகரன் பிரேம்குமார் செய்து இருந்தார்.

    ×