என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்எல்ஏ"
- எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
- 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை.
- காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார்.
#WATCH | Maharashtra | BJP MLA Sunil Kamble was seen slapping a Police personnel during an event at Sassoon Hospital in Pune today. Deputy CM Ajit Pawar was present on the stage at the event when the incident occurred.
— ANI (@ANI) January 5, 2024
Visuals show Sunil Kamble leaving the stage after the… pic.twitter.com/gSXTRmINMr
இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை மறுத்த காம்ப்ளே, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்" என்று கூறியுள்ளார்.
காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயலின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது.
- முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நவ கேரள சதஸ் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள தலைமை செயலகம் நோக்கி, இளைஞர் காங்கிரசாரும், மாணவர் அமைப்பினரும் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, தண்ணீர் புகைவீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவ கேரள சதசின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் சார்பில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சென்ற போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி யடித்தனர். அப்படியும் வன்முறை கட்டுக்குள் வராததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் சுதாகரன், ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கலவரம், சாலைமறியல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எம்.பி.க்கள் சசிதரூர், கொடிக்குன்றில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கே.முரளீதரன், ஜெபி மாதர் மற்றும் ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியது தொடர்பான புகாரில், முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16-ந்தேதி நவ கேரள சதஸ் பயணம், ஆலப்புழாவில் இருந்து அம்பழப்புழா தொகுதிக்கு சென்றபோது பொது மருத்துவமனை சந்திப்பில் நின்ற இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஜய் ஜூவல், மாணவர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஏ.டி.தாமஸ் ஆகியோர் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் பிடித்து அங்கிருந்து அகற்றி உள்ளனர். அப்போது முதல்-மந்திரியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரி அனில்குமார், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆகியோர் வேனில் இருந்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரும், ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலப்புழா தெற்கு போலீசார், விசாரணை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அனில்குமார் மற்றும் சந்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 326, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
- ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
- முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
- ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், எம்மிகானூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எர்ரகொட்டா சென்ன கேசவலு ரெட்டி. இவர் நேற்று தனது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர் பெருநகரங்களில் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள லேப்டாப், டேப் செல்போன் வழங்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை கூறுவது நியாயமானது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
- சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
ராய்ப்பூர்:
5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.
கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
- சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
- அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சிவசங்கரன்.
இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ளது. சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை அமலாக்கதுறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
அதற்கு சிவசங்கரன் எம்.எல்.ஏ. தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
அந்த நபர் சிவசங்கரனிடம், போனில் பேசிய அமலாக்கதுறை அதிகாரி நான் தான் என கூறி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அந்த நபர் அடையாள அட்டையை கையில் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., உங்களின் உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு அவர், உயர் அதிகாரிகள் பேசமாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் அந்த ஆசாமி மீது சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், சிவசங்கரன் எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அதையடுத்து அவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். இதில் பயந்து போன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது 35) என்பது தெரியவந்தது. வரதராஜன் ஆழ்வாரும், அவரது மனைவியும் வீட்டில் முறுக்கு, சோமாஸ் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.
அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வைத்திய நாதனிடம் பணபரி வர்த்தனை மோசடி (மணி லாண்டரி) புகார் வந்ததாகவும் கூறி, அதனை மறைக்கவும் உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தர பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கதுறை அதிகாரி என கூறி பேசியதும் தெரியவந்தது.
போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுலில் எம்.எல்.ஏ., எம்.பி.களின் செல் நெம்பரை எடுத்து தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதுபோல் திருமாவளவன் எம்.பி. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்தது.
அதோடு வரதராஜன் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தமிழக அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஏராளமான போட்டோக்கள் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதராஜன் ஆழ்வார் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவைக்கு வந்து, உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
புதுவையில் இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவசங்கர் எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் வரதராஜன் ஆழ்வார் மீது அரசு ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
- அமலாக்கத்துறையினர் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஆத்மகுரு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மேகபதி விக்ரம் ரெட்டி.
இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் சுங்கவரி வசூலில் ஈடுபட்டார்.
இந்த பணியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மேகபதி விக்ரம் ரெட்டியின் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
விக்ரம் ரெட்டி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையஅதிகாரிகள் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த சில என்ஜினியர்களுடன் சேர்ந்து சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
தேசிய நெடுஞ்சாலையின் மன்னுட்டி-அங்கமாலி இடையே 544 பணிகள் பாதியில் முடிக்கப்பட்டு, ரூ.102.44 கோடிக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
சாலை அமைப்பதற்காக ரூ.721 கோடி செலவழித்துள்ள நிலையில், ஏற்கனவே சுங்கச்சாவடியில் ரூ.1,250 கோடி வசூலிக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமலாக்கத்துறையினர், மேகபதி விக்ரம் ரெட்டி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர். உதவி இயக்குநர் சத்யவீர்சிங் தலைமையிலான 8 அமலாக்க துறை அதிகாரிகள் குழு எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கே.எம்.சி. நிறுவனத்தின் வங்கி இருப்பு ரூ.125.21 கோடியை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம்.
புதுச்சேரி:
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கொல்ல பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.
அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இதனால் தொகுதி வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும் போது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
எனவே அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். அதிகாரிகள் தொடர்ந்து தவறுகள் செய்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
- காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
- மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.
நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.
- கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிட நலப் பள்ளியில் சரியில்லாத உணவை மாணவ மாணவிகளுக்கு கொடுத்ததால் வாந்தி, மயக்கம்
- பாதிக்கப்பட்ட மாணவர்களை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் மதிய உணவு புளி சாதம் முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவிகள் 30 மாணவர்களும் பயின்று வருகின்றனர் இவர்களில் 55பேர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று மதிய உணவு சமைப்பதற்கு தயார் செய்தபோது அரிசி சரியில்லை என்று சமையல் செய்பவர் தலைமை ஆசிரியர் புஷ்பவல்லியிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை சமையல் செய்து மாணவர்களுக்கு கொடுங்கள் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. மதியம் மாணவர்களுக்கு புளி சாதமும் முட்டையும் வழங்கப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் இளமதி சமையலர் சரஸ்வதியும் சமையல் உதவியாளர் சபிதாவும் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பிட்ட சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் உடனடியாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து அதில் 25 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் தாசில்தார் துறை மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுவது பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்