search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலை"

    • ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
    • பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

    ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • கடந்த 10-ந்தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன.
    • இதுதவிர சோலார் மூலம் கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார நுகர்வோர்களுக்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம், அணு மின்சார உற்பத்தி நிலையம், நீர் மற்றும் கியாஸ் மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் சோலார் தகடுகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் கடந்த 10-ந்தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு 3 ஆயிரத்து 794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4 ஆயிரத்து 314 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தது.

    தற்போதைய நிலையில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சநிலையில் இருக்கிறது. இதுதவிர சோலார் மூலம் கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் மூலம் சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.

    நேற்று காலை 7.50 மணி அளவில் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதியாக அதாவது 1,599 மெகாவாட் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி தேவை 15 ஆயிரத்து 331 மெகாவாட் என்ற அளவில் இருந்தது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

    • எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
    • காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன.
    • காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது.

    கோவை:

    ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது.

    இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இதனால் காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் நாட்கள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவையைச் சேர்ந்தவரும், இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:-

    காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதியஅளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    எனவே அரசாங்கம் காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்வது இல்லை. மத்திய மாநில அரசுகள் காற்றாலைகள் தயாரிக்கும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும், எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், பழைய காற்றாலைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி, குமாரபுரம், செண்பகராமன்புதூர், முப்பந்தல் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக இங்குள்ள சில காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது. இது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலை யில் ஆரல்வாய்மொழி-குமாரபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 காற்றாலைகள் இரவு முழுவதும் ஓடியது.

    அதிகாலையில் மேலாளர் ராபர்ட் ஜான், காற்றாலையை சுற்றிப் பார்த்தபோது காற்றாலை ஓட வில்லை. இது தொடர்பாக அவர் விசாரித்த போது காற்றாலை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதும் உள்ளே இருந்த விலை உயர்ந்த கேபிள் வயர்களை திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டது ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு யேசுவடியான் மகன் ஜெகன் மற்றும் பாபு என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், ஜெகனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். காற்றாலை திருட்டு சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.

    • காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
    • இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின் உற்பத்திக்கான கட்டமைப்பு 8,500 மெகாவாட்டாக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது.

    தற்போது 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் நிலையாக இல்லை. இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அக்டோபர் வரை நீடிக்கும். எனவே கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    வாணியம்பாடி:

    சென்னையில் இருந்து காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இறக்கையை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று இன்று காலை வாணியம்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    வாணியம்பாடி வளையாம்பட்டு சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் மேம்பாலத்தில் கனரக லாரி வந்து கொண்டு இருந்தபோது திடீரென வாகனத்தில் என்ஜின் பழுதானது. இதனால் லாரி சாலையை மறித்தபடி மேம்பாலத்தில் நின்றதால் மற்ற எந்த வாகனமும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் சிக்கி திணறினர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேம்பாலம் வழியாக சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக மாற்றிவிட்டனர்.

    சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் லாரி டிரைவர் என்ஜீனில் ஏற்பட்ட பழுதை சரி செய்தார்.

    இதையடுத்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 6 வழிச் சாலையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். 

    • அனைத்து பருவக்காற்று சீசனிலும் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசும்.
    • தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டி வங்கக்கடலில் ராமேசுவரம் தீவு அமைந்து இருக்கிறது. அந்த தீவின் உள்ளே ராமேசுவரம் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. அங்குள்ள கடலானது, அழகும்-ஆக்ரோஷமும் நிறைந்தது. அந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

    அனைத்து பருவக்காற்று சீசனிலும் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசும். எனவே மத்திய எரிசக்தி துறை சார்பில் தனுஷ்கோடி கடலுக்குள்ளும், கடற்கரை சாலையோரங்களிலும் காற்றாலைகள் அமைக்கலாமா? என்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அதிலும் அரிச்சல்முனை அருகே ராட்சத கோபுரம் அமைத்து காற்றின் வேகம் கணக்கிடப்பட்டது.

    இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    அதைத்தொடர்ந்து தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைய உள்ள இடத்தை மத்திய எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை மந்திரி பகவன்கூபா ஆய்வு செய்தார். தற்போது இத்திட்டத்துக்கான இடமாக கம்பிப்பாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றாலைகள் அமைய இருக்கின்றன.

    இதுபற்றி எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தனுஷ்கோடியில் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 5 இடங்களில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் ரூ.300 கோடி நிதியில் காற்றாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    டென்மார்க் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து காற்றாலைகள் அமைக்கிறோம். விரைவில் டென்மார்க் அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்கு வர உள்ளனர்.

    இதில் கிடைக்கும் மின்சார உற்பத்தியை பொறுத்து வருங்காலத்தில் கூடுதலாக கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கப்படும்.

    தனுஷ்கோடி கடல் பகுதியில் இரண்டு விதமான மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஒன்று கடலுக்குள் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, மற்றொன்று சோலார் (சூரியஒளி) மின்சார உற்பத்தி ஆகும். இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு முழுமையாக மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாசு இல்லாத மின்உற்பத்தி தீவாக ராமேசுவரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குலசேகரன்பட்டினத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 250 கிலோ காப்பர் ஒயர்களை போலீசார் மீட்டனர்.

    தூத்துக்குடி:-

    தூத்துக்குடி மாவட்டம் புதூர்பாண்டியாபுரம் அருகே காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.

    ஒயர் திருட்டு

    கடந்த மாதம் இங்குள்ள ரூ. 2 லட்சம் காப்பர் ஓயர்கள் திருட்டு போனது. இது தொடர்பாக காற்றாலை மேலாளர் கணேசன் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குலசேகரன்பட்டினத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்தக் கும்பலில் இருந்த மடத்தூரை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது34) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புதூர்பாண்டியாபுரம் காற்றாலையில் திருடியது தெரியவந்தது. மேலும் அவருடன் சிவா, செல்வக்குமார் , தனகுருசிங், அருணாச்சலம், மற்றொரு செல்வக்குமார் ஆகியோர் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 250 கிலோ காப்பர் ஒயர்களை மீட்டனர். மாரிச்செல்வம் மீது தூத்துக்குடியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளது.

    • தமிழ் மாதமான ஆடியில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    • கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.

    கோவை:

    தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் ஆடிமாதமான தற்போது காற்றாலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரிரெங்கையன் கூறியதாவது:-

    தமிழ் மாதமான ஆடியில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியஒளி மின்சக்தி, அனல், நீர்மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு மின் உற்பத்தியில் 4-ல் 3 பங்கு மரபுசாரா மின்சக்தி மூலம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்றாலைகளில் இருந்து 100 மில்லியன் யூனிட்களுக்கும் குறைவான ஆற்றல் பெறப்பட்டு வந்தது.

    காற்றின் வேகத்தை பொறுத்து அது சில நேரங்களில் ஒற்றை இலக்கமாக இருக்கலாம். ஆடி பருவத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தமிழக காற்றாலைகளில் இருந்து அதிகபட்ச சக்தியான 119 மில்லியன் யூனிட்டை நேற்று முன்தினம் பெற்றுள்ளது. முந்தைய ஆடி பருவத்துடன் ஒப்பிடுகையில், நேற்று முன்தினம் பெறப்பட்ட மின்சக்தியின் அளவு மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, இது அனல் மின் பயன்பாட்டைக் குறைக்கும் என்பதால், தமிழக மின்பகிர்மான கழகத்துக்கு இது பயனளிக்கும்.

    ஜூலை 9-ந்தேதி வரை காற்றாலைகளில் இருந்து பெறப்பட்ட 340 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் 120.25 சதவீதம் மின்சாரத்தை தமிழக மின்பகிர்மான கழகம் பெற்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.

    கோவை:

    காற்று அதிகம் வீசி வரும் காரணத்தால் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

    தினசரி மின் தேவையில் கூடுதலாக 30 சதவீதம் வரை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதாவது 4,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

    தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கி உள்ளது. காற்று சீசன் தொடங்கி உள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தினசரி மின் சேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மற்றும் அதற்கு மேல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

    இனி வரும் 3 மாதங்களில் காற்று அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.

    சுற்றுச்சூழல், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகவே சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை கருதப்படுகிறது.

    இதன் காரணமாகவே மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

    தூத்துக்குடியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் விதிமுறைகளை மீறி காற்றாலைகள் அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. #WindPower #MadrasHC
    மதுரை:

    தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைப்பதாக அருமைராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காற்றாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    ×