என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "militant"
- ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
- முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
- இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.
சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையின் குழு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
மேற்கொண்டு விசாரணைக்காக ஹியாங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்
தென் மாநிலங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என்று பெங்களுரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் 19 பயங்கரவாதிகள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் ரெயில்களிலும், முக்கிய இடங்களிலும் குண்டு வைத்து தகர்க்க சதி செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஓசூரில் தான் லாரி ஓட்டியபோது இந்தியில் சிலர் பேசி கொண்டதை வைத்து இந்த தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதை தொடர்ந்து கர்நாடக மாநில டி.ஜி.பி. நீல்மணிராஜூ, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, கோவா மற்றும் மாராட்டியம் ஆகிய மாநிலங்களில் டி.ஜி.பி.களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் பெங்களூரு புறநகர் பகுதியான ஆவலஹள்ளி என்ற இடத்தில் வைத்து சுவாமி சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரரான அவர் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து இங்கேயும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று யூகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி இருந்தார். வதந்தி பரப்பிய அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இருநாட்டு உறவு சீர்கெட்டு வருகிறது.
இதை சீரமைப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை நாடுகிறது, பாகிஸ்தான். ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீரின் புலவாமாவில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இருநாட்டு உறவுகளும் மேலும் சீர்குலைந்து இருக்கிறது. எனினும் எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து இருந்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201903150508177658_1_yctndaxk._L_styvpf.jpg)
பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமானது. புலவாமா தாக்குதலுக்கு பின்னும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஒருபுறம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மறுபுறம் ராணுவம் அதை மறுத்து இருக்கிறது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு (இந்தியா) அந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்குகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்காக ஏன் இந்தியாவை தாக்க முயன்றீர்கள்?
பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையான அக்கறையும், தாராளமும் இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது ராஜதந்திரத்தை இம்ரான்கான் நிரூபிக்கட்டும்.
தங்கள் சொந்த மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும். பயங்கரவாதத்தை பேசிக்கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. அதன் மீதான நடவடிக்கையே எங்களுக்கு வேண்டும்.
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக கூறினார். #SushmaSwaraj
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201902231747234308_1_sdgdfj._L_styvpf.jpg)
நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #Peacenotpossible #ifterrorismcontinues #Peaceintheworld #Modi
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த எதிர்பாராத தாக்குதலில் அப்துல் மஜித், மன்சூர் அஹமத், முஹம்மது அமின் ஆகிய 3 போலீசார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் மேலும் ஒரு போலீஸ்காரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர்.
#policemenshotdead #Shopianpolicemen
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவியான தாரிஷி ஜெயின் உள்பட 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு பயங்ரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜமாயத்துல் முஜாஹிதீன் பயங்ரவாத அமைப்பின் தலைவரான ஷமில் (எ) கோர்ஷெட் ஆலம் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811062056303083_1_tarishi-jain-759._L_styvpf.jpg)
போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் கோர்ஷெட் ஆலம் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பிடிபட்ட பயங்கரவாதிகள் தலைவரையும், காயமடைந்த இரு போலீசாரையும் அருகாமையில் உள்ள ஷாஹித் ரஹ்மான் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். போகும் வழியில் கோர்ஷெட் ஆலம் உயிரிழந்ததாக வங்காளதேசம் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன. #Topmilitantleader #Bangladeshmilitantleader #bannedmilitant #KhorshedAlamkilled
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தவறாக வழி நடத்தப்படும் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைகிறார்கள். இதை தடுக்க பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இளம்வயது தீவிரவாதிகளை சரண் அடையும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809101122468131_1_dgp._L_styvpf.jpg)
இதன்படி 2 ஆண்டுகளில் மட்டும் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் உயிர் இழந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் 60 பட்டாலியன்களை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவம், மாநில போலீசார் ஆகியோருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.
இங்கு கொரில்லா முறையில் தீவிரவாதிகள் சண்டையிடுகிறார்கள். திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி விடுகிறார்கள்.
எனவே பாதுகாப்பு வீரர்களுக்கு அதிநவீன கவச உடைகள், ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் பலர் காயம் அடைகிறார்கள். என்றாலும் பொதுமக்களின் உயிர் இழப்பை தடுக்க பொறுமையுடன் செயல்படுகிறார்கள். ராணுவ ரீதியாகவும் பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajivRaiBhatnagar #CRPF
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2016 மற்றும் 2017-ல் 2-வது பட்டாலியன் ஆயுத கிடங்கில் இருந்து 56 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்கள் மாயமாகி இருந்தது.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யமாதாங் ஹாக்கிப் ஹிப் வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த துப்பாக்கி ஆயுத கிடங்கில் இருந்து காணாமல் போனதாகும். மேலும் தங்க கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் மணிப்பூரை சேர்ந்த போராளி அமைப்புகளுடன் எம்.எல்.ஏ. ஹாக்கிக்கு தொடர்பு இருந்ததும், சட்ட விரோத ஆயுத தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ‘கிரா’ என்ற போராளி அமைப்பின் தலைவர் டேவிட் ஹன்சிங் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுத கிடங்கில் இருந்து மாயமானவை ஆகும். இந்த துப்பாக்கிகளை அவருக்கு எம்.எல்.ஏ. கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மணிப்பூர் போராளிகலுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.யமாதங் ஹாக்கிப் கைது செய்யப்பட்டார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதேபோல ‘கிரா’ என்ற போராளி குழு தலைவர் டேவிட் ஹன்ஹிங்கும் கைதானார். காணாமல் போன துப்பாக்கிகளில் இது வரை 14 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #YamthongHaokip
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)