மணிப்பூர் என்கவுண்டர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மணிப்பூர் என்கவுண்டர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்த போதிலும், அவ்வப்போது இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த 11 பயங்கரவாதிகளும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com