search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடை"

    • மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    • மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.

    'மிச்சாங் புயல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இந்த முறை சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் வடகடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக வேகமாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலாளர் ராஜா ராமன், வருவாய் பேரிடர் துறை இயக்குனர் ராமன், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன்,

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தீயணைப்பு இயக்குனர் ஆபாஷ் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார். 

    அப்போது அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்கள். இதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    27.11.2023 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    புயல் பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் வசதி உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    மழை வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் காரணத்தால் புயலின்போது, விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக்குழுக்களை முன் கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

    பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கனமழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த மழை காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி குழுக்கள், போலீஸ், தீயணைப்பு துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திட விரும்புகிறேன்.

    கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழைநீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனே நீரை அகற்ற வேண்டும்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களின் சிரமத்தை குறைத்திடவும், தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    மழைக்கால நிவாரண பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு குறிப்பான தேவைகளை உடனடியாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு தெரிவித்து பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதை அரசு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செந்தில் நகர், நாகலம்மன் நகர், கைனூர், வாணியம்பேட்டை உள்ளிட்ட அரக்கோணம் நகர எல்லை பகுதிகளுக்கு மின்சாரம் வழங் கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சில நிமிடமே பெய்த லேசான மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறு தூறல் அல்லது காற்று வீசினாலே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக் கள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், அடிக்கடி இது போன்று பல மணி நேரம் ஏற்படும் மின் வெட்டால் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.

    எனவே இது போன்று அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாலாஜிநகர், அய்யப்பாநகர் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின்நிலையப்பகுதிகளில் நாளை 28-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம் மற்றும் நல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு. பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பாநகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் தடை என்று அறிவிப்பு

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாப்பட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி,

    கொடம்பறை, மதுக்காம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பொத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பனம்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பபட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கல்லூர், கீழ குளத்தூர், திருப்பெயர், மஞ்சமேடு, கரைவெட்டி பரதூர், வேட்டக்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பெரியமறை, அழகிய மணவாளன், மாத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணியில் இருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • அண்ணா பஸ் நிலைய பகுதியில் 25-ந் தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 25-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, கோரிப்பளையம், ஐம்பு ரோபுரம், மாரியம்மன் கோவில்தேரு, சின்னக் கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயிஸ்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், நரிமேடு மெயின்ரோடு. சாலை முதலியார் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்.

    அன்னைநகர், எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தேரு கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா அண்ணாநகர், 80அடி ரோடு, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, சதா சிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், அன்பு நகர், தாசில்தார் நகர், மருது பாண்டியர் தெரு, எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது
    • நாளை மின் விநியோகம் இருக்காது

    பல்லடம் : 

    பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் (ஒரு பகுதி).

    • திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • செயற்பொறியாளர் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(22-ந்தேதி)புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9மணி முதல் மாலை4மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மின் வினியோகம்
    • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறு நாள் (வியாழக் கிழமை) நடக் கிறது.

    எனவே அன்று காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழம ணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக் கோட்டுப்பொத்தை, வாரி யூர், அகஸ்தீஸ்வரம், மருங் கூர், தேரூர், புது கிராமம், காக்கமூர், பொத் தையடி, தோப்பூர், ஊட்டு வாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனா திச்சன் புதூர், மேல கருப்புக் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×