search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gifts"

    • 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
    • பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.

    சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:

    டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.

    ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.


    மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.

    தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.

    கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
    • முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.

    முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் போதைப்பொ ருட்கள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நம்ம தெரு நிகழ்ச்சி இன்று காலையில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களினால் ஏற்படும் தீங்கு குறித்தும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விருத்தாசலம் பூதாமூரில் நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வரவேற்புரையாற்றினார்.

    இதில் அமைச்சர் சி.வே.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம தெரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருத்தாலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 350-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான 350க்கு மேற்பட்டோர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    விழாவிற்கு மதுக்கூர் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    ஓய்வு பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் வட்டார வள மையமேற்பா ர்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரகாஷ், வீரப்பரா ஜனும்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    விழாவின் நடுவர்களாக கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, மன்னங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு போட்டியா ளர்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்தனர்.

    முதல் இடத்தை ஜெயபாரதியும், 2-வது இடத்தை கௌதமியும், 3-வது இடத்தை லதாவும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிவேலு பரிசுகள் வழங்கினார்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராணி , உதவி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், ஆசிரி யைகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
    • சிறந்த கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    • மாணவர்களுக்கிடையே மாறுவேட போட்டி நடைபெற்றது.
    • வேடம் புரிந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     பூதலூர்:

    ஆலக்குடி - வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ ) பள்ளியில் கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கோகுலாஷ்டமி விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கிடையே கிருஷ்ணன் ராதை மாறுவேடப் போட்டி நடைபெற்றது. வேடம் புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து நடந்த ஆசிரியர் தின விழாவில் ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன், செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் பள்ளியின் முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் சரண்யா முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.விழாவில் ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர்.

    • குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
    • அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.

    நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:

    தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.

    குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.

    முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.

    இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.

    அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

    • திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
    • சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்‌ஷாபந்தன் கொண்டாடக்கூடாது

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.

    அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

    மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

    நல்ல நேரம்

    பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.

    அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10  மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • மாணவர்களை ஊக்குவித்தால் அவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
    • முன்னாள் மாணவர்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவில் மாணவ- மாணவிகளின் தனித்திறன் போட்டிகளான கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர்.

    அப்பொழுது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்:-

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள் இணைந்து இதுபோல் தற்போதைய மாணவர்களை ஊக்குவித்தால் மாணவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.

    மேலும், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவும், பரிசு வழங்குவதற்கும் முன்வர வேண்டும் என்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலை ஆசிரியர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.

    ×