search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுகள்"

    • ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
    • முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.

    முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் போதைப்பொ ருட்கள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நம்ம தெரு நிகழ்ச்சி இன்று காலையில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களினால் ஏற்படும் தீங்கு குறித்தும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விருத்தாசலம் பூதாமூரில் நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வரவேற்புரையாற்றினார்.

    இதில் அமைச்சர் சி.வே.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம தெரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருத்தாலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    சாயல்குடி

    கடலாடி நகர் தேவர் உற வின்முறைக்கு பாத்தியப் பட்ட பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 116-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 28-ந் ேததி ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராம நாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். மாட்டு வண்டி பந்தயத்தை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவரும் கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. குழு தலைவரு மான முனியசாமி பாண்டியன் போட்டியை நடத்தி வைக்கிறார்.

    பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்த யத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனிய சாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

    • 350-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான 350க்கு மேற்பட்டோர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    விழாவிற்கு மதுக்கூர் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    ஓய்வு பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் வட்டார வள மையமேற்பா ர்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரகாஷ், வீரப்பரா ஜனும்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    விழாவின் நடுவர்களாக கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, மன்னங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு போட்டியா ளர்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்தனர்.

    முதல் இடத்தை ஜெயபாரதியும், 2-வது இடத்தை கௌதமியும், 3-வது இடத்தை லதாவும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிவேலு பரிசுகள் வழங்கினார்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராணி , உதவி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், ஆசிரி யைகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
    • சிறந்த கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
    • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

    விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

    பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

    • மாணவர்களுக்கிடையே மாறுவேட போட்டி நடைபெற்றது.
    • வேடம் புரிந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     பூதலூர்:

    ஆலக்குடி - வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ ) பள்ளியில் கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கோகுலாஷ்டமி விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கிடையே கிருஷ்ணன் ராதை மாறுவேடப் போட்டி நடைபெற்றது. வேடம் புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து நடந்த ஆசிரியர் தின விழாவில் ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன், செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் பள்ளியின் முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் சரண்யா முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.விழாவில் ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது. இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார், தோவாளை ஊர் தலைவர்களாக கேசவமுருகன், வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி பகவதியப்பன், ஆசிரியர் சேகர் மற்றும் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. சக்தி மகளிர் டிரஸ்ட், பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து போட்டியை நடத்தின.

    • சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப் பாக பணியாற்றிய வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேசன் முதல் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரெங்கநாதன் 2-ம் பரிசும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் 3-ம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் காரியா பட்டி தனி வட்டாட்சியர் அய்யக்குட்டி முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்தி 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் மகேஸ்வரி 3-ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி மற்றும் வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியர் (பொ) ரமேஷ்குமார் ஆகியோருக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப்பிள்ளை 2-ம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்க ளில் ராஜபாளையம் வட்டத்துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தன் 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜ் 3-ம் பரிசும், அதிக எண்ணிக்கை யில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்டம் நில அளவர் காஜாமைதீன் முதல் பரிசும், ராஜ பாளையம் வட்டம் குறுவட்ட அளவர் காளிமுத்து 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் சார் ஆய்வாளர் சங்கிலீஸ் வரி 3-ம் பரிசினையும் கலெக்டர் வழங்கினார்.

    • திட்டச்சேரி அரசு பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 62-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்குழலி தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆனந்த், செயின்ட் மைக்கேல் அகாடமி தலைவர் ஆல்பிரட் ஜான்,பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஜெயினுல் ஆபிதீன்,முகமது ஷெரீப், அப்துல் நாசர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி வளர்ச்சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

    • இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.

    போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
    • சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.

    திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×