search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    கால்நடை மருத்துவ முகாம்

    • கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விளக்கமளித்தனர்.
    • சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளி விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

    களஞ்சேரி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவத்துறையினர் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் விளக்கமளித்தனர்.

    தொடர்ந்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில் களஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×