search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
    X

    விழாவில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பேசிய காட்சி.

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

    • பள்ளி ஆண்டு விழாவுக்கு பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார்.
    • 240 மாணவ- மாணவிகளுக்கு அன்பளிப்பு வழங்கினர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை வைஸ்ணவா கல்லுரி உதவி பேராசிரியர் சின்னம்மாள் ஜானகி, ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    ஓட்டல் ஆர்யாஸ் சங்கர் பாபு, மணிவண்ணன் நினைவாக ஜனனி, சடையப்பன் நினைவாகவும் 240 மாணவ- மாணவிகளுக்கு பரிசினை அன்பளிப்பாக வழங்கினார்கள். இந்து மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவசங்கர ராமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×