search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultural"

    • 11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை.

    சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக தங்கள் கலாச்சாரத்தைப் பற்றியே வெட்கப்படும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டு கவுகாத்தியில் நடந்த மாபெரும் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த காலத்தை அழித்து எந்த நாடும் முன்னேற முடியாது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது" என்றார்.

    மேலும் அவர், " தொடங்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்கு மட்டுமின்றி தெற்காசியாவின் மற்ற பகுதிகளிலும் இணைப்பை பலப்படுத்தும்.

    கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே இறக்கிவிட்டு முக்கிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்" என்றார்.

    • ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விவேகானந்தக் கேந்திரமும், ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் ராஜபாளையம் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவில் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கேந்திரக்கிளைப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார். 32 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 80 மாணவ மாணவியர்கள் பரிசுகள் பெற்றனர். கோவில்பட்டி கேந்திர கிளை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு ேபசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் குழுவினர் தேர்வு செய்தனர். இதில் பிரிவு வாரியாக முதல் பரிசு ரூ.6 ஆயிரம் , இரண்டாம் பரிசு ரூ.4,500 மற்றும் 3-வது பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டது.

    இசைக்கருவி இசைத்தல் பிரிவில், நாதஸ்வரம் - கோவிந்தராஜ் (அவிநாசி), தவில் - சங்கிலிதுரை (அலங்கியம்), நாதஸ்வரம் - கிருஷ்ணகுமார் (முத்தூர்).பரதம் பிரிவில், மோனிகா ஜெயஸ்ரீ (அனுப்பர்பாளையம்), சக்தி பிரியா (பாளையக்காடு), யாஷ்னா (முதலிபாளையம்). பாட்டு - மகிழன்பருதி (கருமாரம்பாளையம்), சண்முக பாக்யஸ்ரீ (திருப்பூர்) மற்றும் காயத்ரி (ராக்கியாபாளையம்).கிராமிய நடனத்தில், ஸ்ரீவர்தினி, சன்மதி, சங்கர் ஆகியோரும் ஓவியத்தில் சரண், திரிநேத்ரா, ஜெகன் ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    ×