search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமுகாம்"

    • ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    இந்தியா மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை 8- வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவப்பிரிவால் நடத்தப்படும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் தஞ்சை வடக்கு வீதியில் நடை பெற்றது.

    முகாமிற்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் அனைத்து மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சளி, இருமல், ஆஸ்துமா, ஜூரம் உள்னிட்ட சுவாசக் கோளாறுகள் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளிட்ட அனைத்து தோல் நோய்கள், இதயம் மட்டும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலஹீனம், ரத்தச் சோகை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கருப்பைக்கோளாறு மற்றும் பெண்களுக்கான நோய்கள், அயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகள், சர்க்கரை, உப்பு நீர், இரத்தக் கொதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் சித்த அலுவலர் குணசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் கஜேந்திரன், மூத்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் சங்கீதா ஆயுர்வேத மருத்துவர் பபிதா, கிருத்திகா யோகா மருத்துவர் பழனிசாமி, மற்றும் ஆறுமுகம் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திரஜித், மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி, சதாசிவம் மற்றும் ஆயுர்வேத துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.

    தாராபுரம்

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொன்னாபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.

    அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம், மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10-பேருக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    மேலும் முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். தளவாய் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 300 பெண்கள் உள்பட 750 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் நவீன் நன்றி கூறினார்.

    • கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்

    நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவம் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் லாரன்ஸ், பூபதி, ராதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் கமலப்பட்டு வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
    • சிறந்த கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும்எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பல்லடம்:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
    • பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
    • சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமுக்கு வந்தவர்களுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து-மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதுதவிர பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை நடத்தப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இதுதவிர சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கோத்தகிரி சிறப்பு மருத்துவ முகாமில் வட்டார பொது சுகாதார மருத்துவர் ராஜேஷ், மாவட்ட துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசுவாமி, பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி, சிவா, குமார், பிரசாத் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோத்தகிரி சிறப்பு முகாமை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறுகிறது
    • 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் கிராமம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 24ந்தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் கட்டணமின்றி செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறுப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரிய லூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் முத்து கிரு ஷ்ணன், பொது சுகாதார துணை இயக்குநர் செந்தி ல்குமார், துணை இயக்கு நர்கள்இளவரசன், சுதாகர், வருவாய் கோட்டாட்சி யர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூப்பூரில் ரூ..15 லட்சம் மதிப்பில் மகளிர் சமுதாய கூடம் கட்டும் பணி தொடங்கியது.
    • காதுகுத்து, மகளிர்குழு கூட்டங்கள், மகளிர்க்கான மருத்துவ முகாம் போன்றபயன்பாட்டிற்கான மகளிர் சமுதாயக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலையில் உள்ள கருப்பூர் கிராமத்தில்கவ்டெசி தொண்டு நிறுவனம் மூலம் மகளிர் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மதுவிழி தலைமையில் நடைபெற்றது.

    கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடனும், கையுடன் கை தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1500 சதுர அடியில் பெண்கள்மேம்பாட்டிற்கான வளைகாப்பு, பூப்பு நீராட்டு விழா, காதுகுத்து, மகளிர்குழு கூட்டங்கள், மகளிர்க்கான மருத்துவ முகாம் போன்றபயன்பாட்டிற்கான மகளிர் சமுதாயக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது .

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் செயலாளர்கருணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டு விழாவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகளிர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், கவ்டெசி நிறுவன தலைவர் மாவடியான்மற்றும் நிர்வாக இயக்குனர்கல்பனா சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் பாஸ்கர், ரூபன்,லில்லி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக அழகர் நன்றிகூறினார்.

    • 428 ஆடுகளுக்கு சிகிச்சை
    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி மேல புலவன்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பசுமை தேசம் சதீஷ்குமார் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடை பெற்றது. இந்த சிறப்பு முகாமில் 358 பசுமாடுகள், 428 வெள்ளாடுகள், செம்மறி யாடுகள், நாய் மற்றும் கோழிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது. சிறந்த கிடேரி கன்று உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம் முகாமில் மாடுகளுக்கு சினை ஊசி, சினை பரிசோதனை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப் பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்கு தாது உப்பு கல வைகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க ம ருந்துகள், சளி மருந்துகள் அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கள் செலுத்தப்பட்டது. இச்சிறப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் விக்னேஷ், கமலா தேவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை வழங்கினார்கள்.




    ×