search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை மருத்துவ முகாம்

    • 428 ஆடுகளுக்கு சிகிச்சை
    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி மேல புலவன்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பசுமை தேசம் சதீஷ்குமார் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடை பெற்றது. இந்த சிறப்பு முகாமில் 358 பசுமாடுகள், 428 வெள்ளாடுகள், செம்மறி யாடுகள், நாய் மற்றும் கோழிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது. சிறந்த கிடேரி கன்று உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம் முகாமில் மாடுகளுக்கு சினை ஊசி, சினை பரிசோதனை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப் பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்கு தாது உப்பு கல வைகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க ம ருந்துகள், சளி மருந்துகள் அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கள் செலுத்தப்பட்டது. இச்சிறப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் விக்னேஷ், கமலா தேவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை வழங்கினார்கள்.




    Next Story
    ×