search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் மருத்துவமுகாம்
    X

    மருத்துவமுகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கினார்.

    வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×