search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு பணி"

    • ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.
    • தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது. ஜூன் 4-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு நாளை மாலை முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    நாளை மாலை முதல் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகத்தில் தனித்தனியே ஸ்டிராங் ரூம்களில் வைத்து சீலிடப்படும்.

    அதன்பின் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை ஒட்டி பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இறுதியாக உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

    ஜூன் 4-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும். ஒரு ஷிப்ட்டுக்கு துணை ராணுவம், பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 199 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    • சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.

    இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    வேங்கிக்கால்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புத்தாண்டு தினத்தில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருவாய் துறை, காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளிமாநில பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.

    நேற்று காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்து. இந்நிலையில் அரசு துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் அருணாசலேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து முறையான அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி பதாகைகளோ வைக்கப்படுவதில்லை. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. 5-ம் பிரகாரத்தில் திருப்பதியில் உள்ளதைப்போல் பக்தர்கள் அமர்ந்து காத்திருக்கும் அறைகள் அமைக்க வேண்டும். இந்த அறைகளில் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.

    அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

    • இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில், 2024-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாது காப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது.

    முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணை யாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர் கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை 31.12.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று இரவு 9 மணியில் இருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட் டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண் டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

    இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31-ந்தேதி மாலை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந் தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளுநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏ.டி.வி. எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலை யிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும்.

    மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள், கடற்கரை ஓரங்களில் பாது காப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். மொபைல் சர்வைலன்ஸ் எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் பி.ஏ.சிஸ்டெம், பிளிக்கெரிங் லைட் போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்து வதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை பெருநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடை பிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2024-ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
    • நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.

    இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    • பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
    • ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பதி:

    பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

    விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருமலைக்கு வருகிறார். திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், மதிய பாதுகாப்பு படை போலீசார் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    மேலும் பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையல் ஆந்திர மாநிலம், விஜயவாடா, பொரங்கியை சேர்ந்தவர் கிருபாகர். இவர் மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக வேலை செய்து வந்தார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
    • விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து தீபாவளியை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தங்களது பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களி லும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.

    நேற்று மாலை அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் சென்னை யில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வழியாக தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு வழிகள் திறந்து 8 வழிகளில் வாக னங்கள் அனுப்பி வைக்கப் பட்டது. நேற்று மாலையில் இருந்து இரவு 7.30 மணி வரை 35 ஆயிரம் வாகனங்க ளும், நள்ளிரவு கடந்து அதிகாலை 8 மணி வரை 55 ஆயிரம் வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேலும் அசம்பா விதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
    • அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த பொய்ய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சர்வேசன்( வயது 34) அவரது மனைவி விஜயா தேவி, உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த போலீசில் பணியாற்றி வரும் போலீசார் இருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து பாதை அமைத்து அவரது நிலத்திற்கு செல்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    அதை மீறி அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தங்கள் நிலப்பயிர்களை அழித்து பாதையை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் போதைப்பொ ருட்கள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நம்ம தெரு நிகழ்ச்சி இன்று காலையில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களினால் ஏற்படும் தீங்கு குறித்தும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விருத்தாசலம் பூதாமூரில் நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வரவேற்புரையாற்றினார்.

    இதில் அமைச்சர் சி.வே.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம தெரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருத்தாலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.
    • பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசு துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன் ,கிருஷ்ணமூர்த்தி தங்கவேல் ,பரமசிவம் ,சித்ரா ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மணி தேவன், சீனிவாசன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 48 பேரை கைது செய்தனர்.

    • அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
    • திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.

    இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் காணிக்கைகளை ஒவ் வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவா னந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வர் சங்கீதா, அறங்கா வலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் ரொக்கமும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த பணியின்போது அறங்காவலர்கள் பூசாரிகள் தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடி வேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழி யர்கள், ஆகியோர் உடனி ருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    ×