search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock racing"

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தேவ ரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எல்கை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்ற பெரிய மாடு களுக்கு தேவரம்பூர் விலக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழு வினரால் நிர்ணயம் செய்யப் பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராம்நாடு, தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் முதல் பரிசாக பரவை நகரத்தைச் சேர்ந்த முத்து தேவருக்கும், 2-ம் பரிசாக பூக்கொள்ளை காளிமுத்துக்கும், 3-வது பரிசை பரளி கிராமத்தைச் சேர்ந்த கேரளா பிரதர்சும் பெற்றனர். நினைவு பரிசை தேவரம்பூர் கிராமத்தை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. அதே போல் சின்ன மாட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதல் பரிசை குண்டேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த கனக வல்லி, 2-ம் பரிசை தேவரம் பூர் கிராமம் ராமநாதன், 3-ம் பரிசை தேவரம்பூர் கிராமம் சுதாகர், 4-ம்பரிசை பொய்கரைபட்டி பாலு ஆகியோருக்கும் விழா குழுவினரால் வழங்கப்பட் டது.

    மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடு களை தேவரம்பூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இப் பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர் களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தில் மொட்டை இருளப்பசுவாமி கோவில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது.

    போட்டி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிவரை நடந்தது. இதில் 7 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 29 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இதில் மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் பங்கேற்றன.

    ரேக்ளா பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் அதனுடன் ஒரு பெரிய வெள்ளாடும் பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×