என் மலர்
நீங்கள் தேடியது "protective function"
- திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
- 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த வைரஸ் புதியதல்ல. ஏற்கனவே நம்மோடு இருப்பதுதான். கடந்த 2001-ல இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொற்று ஏற்பட்டால் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் குணமாகி விடும். தமிழகத்தில் பாதிக் கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை நலமாக இருக்கிறார்கள். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கும்.
வைரஸ் தொற்றுக்களை நினைத்து பீதி அடைய தேவையில்லை. இனி நாம் வைரஸ்களோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் குறிப்பிட்டதைபோல் நாம்தான் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிடுவது, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுவாகவே மார்க்கெட் பகுதி, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த வைரசை பற்றி பீதி அடைய வேண்டாம். விழிப்புணர்வும், வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






