search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
    X

    பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி.

    திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

    • திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி மகாபாரதக் கதைக்கேற்ப கதாபாத்தி ரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதா னத்தில் தெளித்தனர்.

    பின்னர் பூ வளர்த்தனர் மாலை 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார் கோட்டை கிராமம், ரெயில்வே பீடர் ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×