search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
    X

    மாறுவேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

    • மாணவர்களுக்கிடையே மாறுவேட போட்டி நடைபெற்றது.
    • வேடம் புரிந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பூதலூர்:

    ஆலக்குடி - வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ ) பள்ளியில் கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கோகுலாஷ்டமி விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கிடையே கிருஷ்ணன் ராதை மாறுவேடப் போட்டி நடைபெற்றது. வேடம் புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து நடந்த ஆசிரியர் தின விழாவில் ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன், செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் பள்ளியின் முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் சரண்யா முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.விழாவில் ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர்.

    Next Story
    ×