search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமர்சனம்"

    • தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.
    • நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

    இதனையொட்டி தனது சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர்கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமூகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே என்னை உயர்த்திக் கொண்டேன்.

    தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

    நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் சட்டப்பேரவை கோப்பு தொடர்பாக சபா நாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அரசியலில் 25 ஆண்டுகளை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.

    எந்த கோப்பிலும் சுய லாபத்தை பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கவர்னர் அலுவலகம் இயங்குகிறது.

    மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப் பேரவை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது.

    நாடாளுமன்றக்கட்டிடம், தெலுங்கானா சட்டசபை கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும் போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும், ஆடம்பரமாக செலவிடப்பட்டு விட கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

    இது நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளிடம் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணி யாற்றி கொண்டிருக்கிறேன்.

    என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம்தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தா நான். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுவையில் போட்டியிடுவது பற்றி நான் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள்.

    இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண்.அதனால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுவையை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையா ளத்தை தரவேண்டாம். அது மனவலியை தருகிறது. வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.

    அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை. ஆனால் ஒத்துழைப்பு போதிய அளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று காலை தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி அவர் களே இன்று 2023-ம் ஆண்டின் கடைசி நாளாகும். 2022 வரை ஒவ்வொரு விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.

    இதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். பா.ஜனதாவின் பொய்கள் மிகவும் வலிமையானது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    இதேபோல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாது குறித்த மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டுக்கான 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது. இது கொரோனா தொற்று நோயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    ரஷிய அதிபர் புதின் உடனான டிரம்ப் சந்திப்புக்கு பின்னர், சொந்த கட்சியினரே அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புதின் முன்னால் டிரம்ப் நனைந்த நூடுல்ஸ் போல நிற்பதாக அர்னால்ட் விமர்சித்துள்ளார். #TrumpputinSummit
    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நேற்று நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.

    ‘ரஷியா உடனான நமது உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை)  நன்றி’ என அவர் ட்வீட் செய்தார்.

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் ட்விட்டை லைக் செய்ததோடு, சரியான சொன்னீர்கள் என ரீ-ட்வீட் செய்திருந்தது. மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின் போது, அதிபர் தேர்தல் தலையீடு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை தன்னை வெகுவாக பாதிப்பதாக பேசினார். 



    சொந்த நாட்டின் மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சொந்த கட்சியினரே டிரம்ப்பின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளனர். புதினுக்கு முன் அமெரிக்காவின் கவுரவத்தை டிரம்ப் இறக்கி வைத்துவிட்டதாக அமெரிக்க எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்ட், டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    “அதிபர் டிரம்ப் அவர்களே, புதினுடன் நீங்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை பார்த்தேன். வளைந்து குலைந்த நூடுல்ஸ் போல புதின் முன்னாள் நீங்கள் நிற்கிறீர்கள். ஒரு ரசிக சிறுவன் தனது அபிமானவரின் அருகில் நிற்பது போல இருந்தது. புதினிடம் ஆட்டோகிராப் அல்லது செல்பி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க சென்றவர் போல இருந்தது. தனது கவுரவத்தை மொத்தமாக விற்றுவிட்டீர்கள்” என அந்த வீடியோவில் அர்னால்ட் பேசியுள்ளார்.
    ×