search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B. Chidambaram"

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார்.
    • ஆன்லைன், ஆஃப்லைனில் மக்கள் கருத்துகளை பெற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார். அதன் தலைவராக நான் இருக்கிறேன். ஒருங்கிணைப்பாளராக சிங் தியோ இருக்கிறார். இக்குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இக்குழு ஏற்கெனவே இருமுறை கூடி ஆலோசித்திருக்கிறது. பணிகள் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறுவதற்கான மேலும் இரு வழிகளை இன்று நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒன்று, இதற்காக https://awaazbharatki.in என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் சென்று அதில் உள்ள பிரிவுகளின்படி மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இரண்டாவது வழி, awaazbharatki@inc.in என்ற இ-மெயில் ஐடி மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம்.

    நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளை வழங்க நாங்கள் வரவேற்கிறோம். இ-மெயில் மூலம் வரும் கருத்துகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, அவற்றில் சொல்லப்பட்டுள்ள யோசனைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்யைில் மக்களை இணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, உண்மையான மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    • நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜனதா எண்ணுகிறது என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    • இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற் றுமை பயண ஓராண்டு நிறைவு விழா மற்றும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற் றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் பெர் ணாண்டோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராம சாமி, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டியன், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பி னர்கள் ராஜராம்பாண்டி யன், தெய்வேந்திரன், ரமேஸ்பாபு, கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்க நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதா வது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கி 4,000 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணம் நாடு முழுவதிலும் பெரும் வர வேற்றை பெற்று மன வலி மையை நிருபித்து காட்டிய வர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்ப டுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் வேலை இல்லாத நிலை அதி கரித்துள்ளது.

    இளைஞர்கள் 22 சதவீதம் வேலையின்மை, பட்டதாரி கள் மத்தியில் 42 சதவீதம் வேலையின்மை என மொத் தமாக இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதுவே செயல் இழந்த அரசு என்பதற்கு உதாரணம். பா.ஜ.க. ஆட்சி யில் கடந்த பத்து ஆண்டுகள் இந்திய பூமி கலவர பூமியாக மாறிவிட்டது. மணிப்பூர் மாநிலம் கடந்த 150 நாட்க ளாக பற்றி எரிகிறது. 60 ஆயிரம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இருந்து வரு கின்றனர். 600-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர்.

    பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனையே நாடு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநி லத்திற்கு மட்டும் செல்லாதது அரசியல் ஆதாயத்தை தேடு கிறார் என்பதை காட்டுகிறது.

    நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட் சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவதை தடுக்க வேண் டும். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள பெண்க ளுக்கான இட ஒதுக்கீடு சில திருத் தங்கள் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் நிறை வேற்றும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ×