search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B. Janata"

    • நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜனதா எண்ணுகிறது என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    • இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற் றுமை பயண ஓராண்டு நிறைவு விழா மற்றும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற் றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் பெர் ணாண்டோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராம சாமி, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டியன், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பி னர்கள் ராஜராம்பாண்டி யன், தெய்வேந்திரன், ரமேஸ்பாபு, கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்க நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதா வது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கி 4,000 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணம் நாடு முழுவதிலும் பெரும் வர வேற்றை பெற்று மன வலி மையை நிருபித்து காட்டிய வர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்ப டுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் வேலை இல்லாத நிலை அதி கரித்துள்ளது.

    இளைஞர்கள் 22 சதவீதம் வேலையின்மை, பட்டதாரி கள் மத்தியில் 42 சதவீதம் வேலையின்மை என மொத் தமாக இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதுவே செயல் இழந்த அரசு என்பதற்கு உதாரணம். பா.ஜ.க. ஆட்சி யில் கடந்த பத்து ஆண்டுகள் இந்திய பூமி கலவர பூமியாக மாறிவிட்டது. மணிப்பூர் மாநிலம் கடந்த 150 நாட்க ளாக பற்றி எரிகிறது. 60 ஆயிரம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இருந்து வரு கின்றனர். 600-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர்.

    பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனையே நாடு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநி லத்திற்கு மட்டும் செல்லாதது அரசியல் ஆதாயத்தை தேடு கிறார் என்பதை காட்டுகிறது.

    நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட் சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவதை தடுக்க வேண் டும். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள பெண்க ளுக்கான இட ஒதுக்கீடு சில திருத் தங்கள் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் நிறை வேற்றும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் தலைவர் தமிழ் மாறன் தலைமையில் போலீஸ்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி நாரா சைதன்யாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போராட்டம் செய்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தும் விதத்தில் அவதூறு பரப்பும் விதத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் புகழை குறைத்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்ததிய திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு அளித்தபோது மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் அருள், ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கலை மாமணி தட்சிணாமூர்த்தி, காமாட்சி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் காத்தவராயன்,

    நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    ×