search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள்"

    • மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:

    டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.

    ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.


    மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.

    தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.

    கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
    • முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

    • எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை.
    • காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீரிழிவு நோயை தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்.
    • மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்தி ரியில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அதில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மருத்துவமனை நிர் வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் 10 கோடிக்கும் அதிக மான மக்களை நீரிழிவு நோய் பாதித் துள்ளது. ஆனாலும் நாட்டில் 50 சத வீதத்திற்கும் அதிகமான நோய் பாதிப் புகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. இது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்ப தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    ஒவ்வொரு தனிநபரும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மர பணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் அதன் விளை வுகளை புரிந்துகொண்டு தகுந்த நடவ டிக்கை எடுப்பதன் மூலம் அதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பீடுவதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின், ஹீமோகுளோபின் ஏ1சி நிலை பரிசோதனை ஆகிய 3 வகையான ரத்த பரிசோதனைகள் முக்கியம்.

    நீரிழிவு நோயை தடுக்க மக்கள் இள மையாக இருக்கும்போதே சுறுசுறுப் பான வாழ்க்கை முறையை மேற் கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்க ளாவது நீச்சல், ஜாகிங் அல் லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக் கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள பழகுவது நல்லது.

    சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை கள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
    • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

    • கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
    • மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வேண்டும்

    கருங்கல் : 

    கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கமிட்டி கூட்டம் வட்டார கமிட்டி உறுப்பினர் றசல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் சாந்தகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் ஜாண்றோஸ், சோபனராஜ், குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சுண்டவிளையில் செயல்பட்டுவரும் கருங்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் வருகையை உறுதிபடுத்த வலியுறுத்துவது. மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வைப்பதோடு, அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகாதார துறையையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாலூகா டி.கல்விக்குடி மேலகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 19).

    இவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பூண்டிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் உணவை பார்சல் வாங்கி கொண்டு திரும்பி சென்றார்.

    பூண்டி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீசார் பிரேதத்தைப் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவரது மகன் தேசிகன் (வயது 26).

    கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண், நகர்புற சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். பிரச வத்திற்காக சென்றபோது பிரசவம் செய்வதில் மருத் துவ ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக கூறி கடந்த 29-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனையடுத்து பிரச வத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறையில் அத்துமீறி தலையிட்டு மகப் பேறு துறையின் பெயரை கெடுக்கும் வண்ணம் செயல் பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபோல், அவர் பல வித அதிகார மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார் பில் டாக்டர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி, கருப்பு பட்டை அணிந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3-வது நாளா கின்று அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து, அரசு டாக்டர் கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் கள் தெரிவித்தனர்.

    • கட்டியை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
    • இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்பப்பையில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சுஜித்ரா (வயது 50). சுசித்ராவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    சம்பவத்த ன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு சுசித்ராவின் வயிறு பகுதியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கால்பந்தை விட 16 கிலோ எடையிலான கட்டி ஒன்று சுசித்ராவின் கர்ப்பபையில் இருப்பதை கண்டுபி டித்தனர்.

    இந்த கட்டியை அகற்ற சுசித்ராவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ மருத்துவ பரிசோ தனைகளும், ஆலோ சனைகளும் செய்யப்பட்டது.

    இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் அமுதன் தலைமையில் உதவி நிபுணர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர்கள் ஆனந்தராஜ், அருண் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சுசித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் சுமார் 16 கிலோ எடை கொண்ட கட்டியினை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    பைப்ரோய்டு யூட்டரஸ் எனப்படும் இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்ப பையில் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது. தொப்பை தானே என்று கண்டு கொள்ளாமல் அவர் விட்டு விட்டார். சிறிது, சிறிதாக அந்த கட்டி வளர்ந்து ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை அடைக்கும் தருவாயில் சென்று விட்டது.

    முடியாத பட்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினோம். தற்போது நினைத்து நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
    • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

    அதில் கூறியிப்பதாவது:-

    155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

    நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

    இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

    திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.

    எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.

    திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×