search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டரை நியமிக்க வேண்டும்
    X

    வர்த்தக சங்கத்தினர், அமைச்சர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருமருகல் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டரை நியமிக்க வேண்டும்

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×