search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் பூதாமூரில் போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்து நம்ம தெரு நிகழ்ச்சி
    X

    நம்ம தெரு நிகழ்ச்சியை அமைச்சர் சி.வே.கணேசன் தொடங்கி வைத்தார்.

    விருத்தாசலம் பூதாமூரில் போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்து நம்ம தெரு நிகழ்ச்சி

    • தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் போதைப்பொ ருட்கள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நம்ம தெரு நிகழ்ச்சி இன்று காலையில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களினால் ஏற்படும் தீங்கு குறித்தும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விருத்தாசலம் பூதாமூரில் நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வரவேற்புரையாற்றினார்.

    இதில் அமைச்சர் சி.வே.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம தெரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருத்தாலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×